தமிழகத்தில் நாளை மழை கொட்டித்தீர்க்கும்? வானிலை மையம் சொன்னது என்ன – முழு விவரங்களுடன்!

0
தமிழகத்தில் நாளை மழை கொட்டித்தீர்க்கும்? வானிலை மையம் சொன்னது என்ன - முழு விவரங்களுடன்!

இன்று முதல் தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

வானிலை மையம்:

தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போது வெளியாகியுள்ள இந்திய வானிலை ஆராய்ச்சி மையத்தின் அறிவிப்பின்படி இன்று முதல் தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று முன்னதாக சென்னை வானிலை அறிவித்து இருந்தது.

ரேஷன் கடையில் அரிசி வாங்குறீங்களா?அப்போ இத பாருங்க!

மேலும் தமிழகத்தில் வட மாநிலங்களின் சில பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 3 முதல் 5 டிகிரி வரை அதிகமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சில நாட்களாக திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. தமிழகத்தில் சனிக்கிழமை 15 இடங்களில் வெப்பநிலை 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் மேல் பதிவாகியுள்ளது. இதில் 106.7 டிகிரி ஃபாரன்ஹீட் அளவில் வெப்பநிலையுடன் சேலம் மாவட்டம் முதலிடம் வகிக்கிறது.

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!