நாடு முழுவதும் செப்டம்பர் மாதம் முதல் ரேஷன் பொருட்களுக்கு தடை? அரசு அறிவிப்பு!
நாடு முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் ரேஷன் கடைகள் மூலம் பயன் பெற்று வருகின்றனர். இந்த நிலையில் செப்டம்பர் மாதத்திற்கு பிறகு ரேஷன் பொருட்கள் வழங்கப்படாது என்பது போன்ற தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இந்த அறிவிப்பின் மூலம் ஏழை, எளிய மக்கள் மிகவும் பாதிக்கப்படுவார்கள் என கருத்துக்கள் எழுகின்றன.
ரேஷன் திட்டம்:
இந்தியாவில் வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் மக்களுக்கு மலிவு விலையில் உணவு பொருட்கள் ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் கோடிக்கணக்கான ஏழை மக்கள் பயன்பெற்று வருகின்றன. இதை தவிர மாநில அரசு மற்றும் மத்திய அரசுகள் மூலம் வழங்கப்படும் அனைத்து சலுகைகளும் இந்த ரேஷன் கடைகள் மூலம் மக்கள் பெற்று வருகின்றன. இந்நிலையில் ரேஷன் கடைகளில் மக்கள் வசதிக்காக பல புதிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு – செப்.10ம் தேதி முதல் தொடக்கம்!
அதாவது நாடு முழுவதும் செயல்பட்டு வரும் ரேஷன் கடைகளில் ஊழல்கள் நடைபெறுவதாக தகவல்கள் வெளியாகின்றன. இதனை தடுக்கும் விதமாக ரேஷன் கடைகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது. இதை தவிர மக்கள் வீட்டிலிருந்தே ரேஷன் கடைகள் திறப்பு மற்றும் உணவு பொருட்களின் இருப்பு நிலை குறித்து தெரிந்து கொள்ளும் வகையில் புதிய ஆன்லைன் திட்டம் தொடங்கப்பட உள்ளது. இதன் மூலம் மக்கள் ரேஷன் பொருட்களை எளிதாக பெற முடியும். இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் மிகப்பெரிய பொருளாதார வீழ்ச்சியை சந்தித்தது.
இந்த நிலையில் மத்திய அரசு பிரதான் மந்திரி கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் ஒரு யூனிட்டுக்கு 5 கிலோ கோதுமை, அரிசி கூடுதலாக வழங்கப்பட்டது. இதையடுத்து தற்போது உத்திரபிரதேச மாநில அரசு செப்டம்பர் மாதம் முதல் ரேஷன் கார்டுதாரர்களுக்கு இலவச ரேஷன் விநியோகம் நிறுத்தப்படுவதாக அறிவித்துள்ளது. இதன்படி, பிரதான் மந்திரி கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் இலவச அரிசி செப்டம்பர் மாதம் வரை மட்டுமே கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதவாது செப்டம்பர் மாதத்திற்கு பிறகு கோதுமை கிலோ ஒன்றுக்கு 2 ரூபாய்க்கும், அரிசிக்கு 3 ரூபாய்க்கும் விற்கப்படும் அறிவிக்கப்பட்டுள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்