ரேஷன் அட்டை இல்லாவிட்டாலும் பொருட்களை பெறலாம் – அரசின் புதிய ஏற்பாடு!

0
ரேஷன் அட்டை இல்லாவிட்டாலும் பொருட்களை பெறலாம் - அரசின் புதிய ஏற்பாடு!

ரேஷன் கார்டு உள்ளவர்கள் மட்டுமே ரேஷன் கடைகளில் மூலமாக பொருட்களை பெற முடியும் என்ற நிலை இருந்து வந்தது. தற்போது இதில் அரசு புதிய ஏற்பாடு ஒன்றை செய்துள்ளது.

ரேஷன் கார்டு:

மத்திய மற்றும் மாநில அரசுகள் அனைத்து வகையான திட்டங்களுக்கும் ரேஷன் கார்டுகளை முக்கிய ஆவணமாக கொண்டு செயல்படுத்தி வருகிறது. கடந்த 2021 முதல் 2023 ம் ஆண்டு வரை மொத்தம் 15 லட்சம் புதிய ரேஷன் அட்டை வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் குறிப்பாக திருநெல்வேலி, கன்னியாகுமரி , திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் மட்டும் இதுவரையிலும் 27,577 புதிய ரேஷன் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பு அறிக்கைகள் தெரிவித்துள்ளது.

BEL நிறுவனத்தில் ஆசிரியராக பணிபுரிய வாய்ப்பு – ரூ.34,200/- மாத ஊதியம் || விண்ணப்பிக்க தவறிவிடாதீர்கள்!  

இந்நிலையில் தமிழக அரசானது புதிதாக ரேஷன் அட்டைக்கு விண்ணப்பித்த 45509 நபர்களுக்கான ரேஷன் அட்டைகளை வழங்க உள்ளது. இவர்களுக்கான உறுதிப்படுத்துதல் செய்திகள் அவர்களின் மொபைல் எண்ணுக்கு அனுப்பப்பட்டுள்ள நிலையில் இந்த மொபைல் குறுஞ்செய்தியை ரேஷன் கடைகளில் காட்டி அவர்கள் குடும்பங்களுக்கான ஒதுக்கப்பட்டுள்ள அரிசி, பருப்பு, கோதுமை, எண்ணெய் போன்ற ரேஷன் பொருட்களை பெற்றுக் கொள்ள முடியும் என்று அரசு தெரிவித்துள்ளது.

Join Our WhatsApp  Channel ”  for the Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!