மதுபான கொள்கை ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் திகார் சிறையில் நான் தீவிரவாதி அல்ல என கதறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
டெல்லி முதல்வர் கதறல்:
டெல்லியின் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மதுபான கொள்கை ஊழல் வழக்கில் கடந்த மார்ச் 21ம் தேதி அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டார். பிறகு டெல்லி உயர் நீதிமன்றமானது ஏப்ரல் 9ம் தேதியன்று முதல்வர் கைது செய்யப்பட்டது செல்லும் என்று தீர்ப்பு வழங்கியது. அதன்பின் திகார் சிறையில் அரவிந்த் கெஜ்ரிவால் அடைக்கப்பட்டார். அவரது நீதிமன்ற காவலானது வருகின்ற 23ம் தேதி வரை தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளது.
ICMR NIRRCH நிறுவனத்தில் நேர்காணல் – டிகிரி முடித்தவர்களுக்கு ரூ.37,000/- மாத ஊதியம்!
இந்நிலையில் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் திகார் சிறையில் உள்ள அரவிந்த் கெஜ்ரிவாலை நேற்று சந்தித்து பேசினார். அப்பொழுது அரவிந்த் கெஜ்ரிவால் தனக்கு கைதிகளுக்கு தரப்படும் அடிப்படை வசதிகள் கூட வழங்கப்படவில்லை எனவும், இங்கு கிரிமினல் குற்றவாளிகளை விட தன்னை மிகவும் மோசமாக நடத்துவதாகவும் கூறினார். அங்கு அவர் படும் வேதனையை மக்களுக்கு தெரிவிக்கும் பொருட்டு “என் பெயர் கெஜ்ரிவால், நான் தீவிரவாதி அல்ல” என்னும் தகவலை மக்களிடம் சேர்க்குமாறு பஞ்சாப் முதல்வரிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.