வளைகுடா மற்றும் ஐரோப்பா நாடுகளில் மே 2 ஆம் தேதி ரம்ஜான் பண்டிகை – இஸ்லாமியர்கள் மகிழ்ச்சி!
இஸ்லாமியர்களின் முக்கிய திருநாளான ரம்ஜான் பண்டிகைக்கு பிறை தென்படாத காரணத்தால் அரபு மற்றும் ஐரோப்பிய நாடுகளில் வருகின்ற மே 2 ஆம் தேதி நோன்பு பெருநாள் கொண்டாடப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
ரம்ஜான்:
உலகில் உள்ள இஸ்லாமியர்கள் அனைவரும் புனித ரமலான் மாதம் தொடங்கி நோன்பு இருந்து வருகின்றனர். இந்நிலையில் உலகம் முழுவதும் ரம்ஜான் மே 2ஆம் தேதி அல்லது 3 ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட இருக்கின்றனர். மேலும் புனித ரமலான் மாதம் ஏப்ரல் 3ஆம் தேதி தொடங்கியது. இஸ்லாமியர்கள் ரமலான் மாதம் பிறந்ததும் நோன்பு என்ற பெயரில் உண்ணாவிரதம் இருந்து இறைவனை வழிபட்டு, தொழுகை நடத்துவார்கள். அதனை தொடர்ந்து ரமலான் நோன்பு என்பது வெறும் உணவை எடுத்துக் கொள்ளாமல் இருப்பது மட்டுமல்லாமல் நீர் அருந்தாமல், புகைக்காமல், வேறு எந்த ஒரு தீய பழக்கங்களிலும் ஈடுபடாமல் இருப்பதாகும். மேலும் இது அவர்கள் இறைவனுக்கு செய்யும் கடமையாகும்.
பள்ளி மாணவர்களுக்கான முக்கிய செய்தி – 10 நாட்கள் மட்டுமே கோடை விடுமுறை! அரசு அறிவிப்பு!
இந்த நிலையில் தற்போது வளைகுடா மற்றும் ஐரோப்பா நாடுகளில் ஈகை திருநாள் பிறை மே 2ஆம் தேதி தெரிய இருக்கும் காரணத்தால் ரமலான் பண்டிகையை நாளை கோலாகலமாக கொண்டாட உள்ளனர். இந்த நிலையில் இன்றுடன் அரபு நாடுகள் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் 29 நோன்பை நிறைவு செய்த இஸ்லாமியர்கள் வானில் பிறையை பார்த்து உள்ளனர். ஆனால், எங்கும் பிறை தென்படவில்லை என்று கூறி விட்டனர்.
Exams Daily Mobile App Download
இந்த நிலையில் சவுதி அரேபிய அரசு வெளியீட்டு உள்ள அறிவிப்பில், ஈத் பிறை தென்படாத காரணத்தால் ரமலான் நோன்பை 30 ஆக பூர்த்தி செய்து மே 2ஆம் தேதி ஈகை பெருநாள் கொண்டாடப்படும் என அறிவித்துள்ளது. அதேபோல் ஐக்கிய அரபு அமீரகம், குவைத், தென் ஆப்பிரிக்கா, பிரிட்டன், மொராக்கோ உள்ளிட்ட நாடுகளிலும் பிறை தென்படாததால் மே 2 ஆம் தேதி ஈகை திருநாள் கொண்டாடப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.