பள்ளி மாணவர்களுக்கான முக்கிய செய்தி – 10 நாட்கள் மட்டுமே கோடை விடுமுறை! அரசு அறிவிப்பு!
கொரோனா காலகட்டத்தில் இழந்த கல்வியை சீர்படுத்த தற்போது ஒடிசா மாநிலம் கோடை விடுமுறையை நாற்பத்தி எட்டு நாளில் இருந்து பத்து நாளாக குறைத்துள்ளது. மேலும் வெயிலின் தாக்கத்தால் பள்ளி நேரத்தை மாற்றி அமைத்துள்ளது.
கோடை விடுமுறை:
கடந்த இரண்டு ஆண்டுகளாகவே கொரோனா பரவல் அதிகமாக இருந்து வருகிறது. கொரோனா பரவளின் காரணமாக இந்தியா முழுவதும் உள்ள எந்த பள்ளி, கல்லூரிகளும் திறக்கப்படவில்லை. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக தான் வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. மேலும், கொரோனாவின் காரணமாக இரண்டு ஆண்டுகளுமே பள்ளி மாணவர்களுக்கு பொதுத் தேர்வுகள் எதுவும் நடத்தப்படவில்லை. பொதுத் தேர்வு நடத்த படாமலேயே அனைவரும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது. ஆனால், கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக தேர்வு நடத்தப்பட்டது. இதனை அடுத்து இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் கொரோனா குறைய ஆரம்பித்துவிட்டது. இதனால் பழையபடி மீண்டும் பள்ளி கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்பட்டு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடைபெற்று கொண்டிருக்கிறது.
தமிழகத்தில் ரேஷன் கார்டு வைத்து உள்ளவர்கள் கவனத்திற்கு – புதிய அப்டேட் இதோ!
இந்தாண்டு பள்ளி மாணவர்களுக்கு கண்டிப்பாக பொதுத் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பொது தேர்விற்கான பொதுத்தேர்வு அட்டவணையும் வெளியிடப்பட்டுள்ளது. இன்னும் பொதுத் தேர்வுக்கு சில நாட்களே இருப்பதால் மாணவர்கள் பொதுத் தேர்வுக்கு தயாராகி வருகின்றன. இந்நிலையில் மீண்டும் அனைத்து மாநிலங்களிலும் கொரோனா பரவல் அதிகரிக்கத் துவங்கியுள்ளது. கொரோனா எவ்வளவு அதிகரித்தாலும் கண்டிப்பாக இந்த ஆண்டு பொதுத் தேர்வு நடத்தப்படும் என அரசு அதில் தீவிரமாக இருந்து வருகிறது. இது மட்டுமல்லாமல் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது.
Exams Daily Mobile App Download
இந்த கொரோனா காலகட்டத்தில் சரியாக பாடங்கள் நடத்த காரணத்தினால் மாணவர்களுக்கு கல்வி திறனும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அனைத்து மாநிலங்களிலும் பள்ளி மாணவர்களின் கோடை விடுமுறை குறைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஒடிசா மாநிலத்தின் தலைநகரான புபனேஸ்வரில் ஏற்கனவே நாற்பத்தி எட்டு நாட்கள் கோடை விடுமுறை என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் பள்ளி மாணவர்களின் கல்வித்திறன் பாதிக்கக்கூடும். கொரோனா காலகட்டத்தில் இழந்த கல்வித்திறனை மீட்டெடுக்க வேண்டும் என்பதற்காக ஜூன் 6 முதல் ஜூன் 16 வரை கிட்டத்தட்ட 10 நாட்கள் மட்டுமே கோடை விடுமுறை அறிவித்துள்ளது. மேலும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வருவதால் காலை 6 மணி முதல் 9 மணி வரை மட்டுமே பள்ளிகள் இயங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.