தமிழகத்தில் ரேஷன் கார்டு வைத்து உள்ளவர்கள் கவனத்திற்கு – புதிய அப்டேட் இதோ!
தமிழகத்தில் உள்ள குடும்ப அட்டை வைத்து உள்ளவர்கள் ஏதேனும் சூழ்நிலையில் பொதுமக்கள் தங்களின் ரேஷன் கார்டுகளை தொலைத்து விட்டால் அதை எவ்வாறு மீண்டும் பெற்றுக் கொள்ளலாம் என்பதை இந்த தொகுப்பில் பார்ப்போம்.
ரேஷன் கார்டு:
தமிழகத்தில் கடந்த இரு ஆண்டுகளாக கொரோனா தொற்று அதிகமாக இருந்த காரணத்தால் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டனர். அந்த நேரத்தில் தமிழகத்தில் செயல்பட்டு வந்த ரேஷன் கடைகள் பொது மக்களுக்கு மிகவும் உதவிகரமாக இருந்தது. மேலும் இந்த ரேஷன் கடைகளில் கொரோனா நிவாரணமாக ரூபாய் 2000 இரு தவணையாக வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து தற்போது மீண்டும் குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூபாய் 1000 வழங்கும் திட்டம் தமிழக அரசின் சார்பில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
இந்தியாவில் மீண்டும் ஊரடங்கு அமல்? வேகமெடுக்கும் கொரோனா தொற்று! பிரதமரின் முடிவு என்ன?
இந்த நிலையில் தற்போது புலம்பெயர்ந்து வாழும் மக்கள் திடீரென தங்களது ரேஷன் கார்டுகளை தொலைத்து விட்டால் நீங்கள் முதலில் செய்ய வேண்டியது என்ன தெரியுமா உடனே ஆன்லைனில் ஈசியாக விண்ணப்பிப்பது எப்படி என்பதை கீழே விவரமாக பார்ப்போம். தொலைத்தவர்கள் கையில் செல்போன் இருந்தால் போதும் இந்த வேலையை வெறும் 20 நிமிடத்தில் முடித்து விடலாம். அதற்கான படிகளாக, 1. தமிழ்நாடு பொது விநியோகத் திட்டத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான அதன் பின்னர் https://www.tnpds.gov.in/ சென்று லாகின் செய்ய வேண்டும். அதனை தொடர்ந்து, இப்போது பதிவு செய்துள்ள தொலைபேசி எண்ணிற்கு குறுஞ்செய்தி மூலம் ஒரு ஒடிபி எண் வரும். அதனைக் கொண்டு சுயவிவர பக்கத்திற்கு உள்நுழையவும்.
Exams Daily Mobile App Download
TNPDS ஸ்மார்ட் கார்டு பதிவிறக்கம் மற்றும் அச்சிடுவதற்கான டேப்-ஐ பார்ப்பீர்கள். மேலும் இதில் கூடுதல் வசதிகளான பெயர் நீக்குதல், மாற்றுதல், சேர்த்தல் போன்ற வசதிகளையும் கொண்டுள்ளது. மேலும் அதில் உங்களுடைய மொழியைத் தேர்ந்தெடுத்து அதன் பின்பு PDF ஃபைலை சேமிக்க, சேமி என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.அதன் பின்பு அந்த பக்கத்தை பிரிண்ட் எடுத்துக் கொள்ளவும். அடுத்தாக, தங்கள் பகுதிக்கு உட்பட்ட வட்ட வழங்கல் அலுவலகத்திற்குச் சென்று இந்த நகலை சமர்ப்பித்தால் போதும் தங்களுக்கு மீண்டும் புதிய ரேஷன் கார்டு வழங்கப்படும். மேலும் இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு 1800 425 5901 என்ற ஹெல்ப்லைனில் பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம் என்றும் தெரிவித்து உள்ளனர்.