ரூ.75,000/- ஊதியத்தில் அரசு வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு !
ராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனம் ஆனது சமீபத்தில் வெளியிட்ட வேலைவாய்ப்பு அறிவிப்பில் Director பணிக்கான பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் காலியாக உள்ள இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை உள்ள நபர்களின் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. நாளை இப்பணிக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் (30.07.2022) என்பதால் விண்ணப்பதாரர்கள் இந்த நொடியே விண்ணப்பித்து பயன் அடையுமாறு இப்பதிவின் மூலம் அழைக்கப்படுகிறார்கள்.
RGNIYD வேலைவாய்ப்பு விவரங்கள்:
Director பணிக்கு என ஒரே ஒரு (01) பணியிடம் மட்டுமே ராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனத்தில் காலியாக உள்ளது.
இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் கல்வி தகுதி பற்றிய விவரத்தை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் காணலாம்.
Exams Daily Mobile App Download
Director பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 65 வயதிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரத்தை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் காணலாம்.
இப்பணிகளுக்கு தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ. 75,000/- மாத ஊதியமாகவும், ரூ.5000/- Special Allowance ஆகவும் வழங்கப்படும்.
விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
RGNIYD விண்ணப்பிக்கும் விதம்:
இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கூறப்பட்டுள்ள படி தங்களது விண்ணப்பத்தை தயார் செய்து தேவையான ஆவணங்களின் நகலை இணைத்து அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும். நாளை (30.07.2022) இப்பணிக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் என்பதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.