குடும்பத்துடன் சினிமாவிற்கு செல்ல திட்டமிடும் சரவணன், பாஸ்கரை சந்திக்க செல்லும் பார்வதி – இன்றைய “ராஜா ராணி 2” எபிசோட்!!
விஜய் டிவி “ராஜா ராணி 2” சீரியலில், சினிமாவிற்கு குடும்பத்துடன் செல்ல திட்டமிடும் குடும்பத்தினர், பாஸ்கருக்கு விக்கி பண உதவி செய்கிறார். பின் பாஸ்கரை சந்திக்க பார்வதி வருகிறார்.
ராஜா ராணி 2:
இன்று “ராஜா ராணி 2” சீரியலில், சிவகாமி சுந்தரத்திடம் ஏன் படத்திற்கு போனீங்க என கேட்கிறார். ஏன் என்னை திட்டிக் கொண்டே இருக்க என்னை பார்த்த பாவமாக இல்லையா என கேட்கிறார். வீட்டில் 4 பசங்க இருக்காங்க, 2 மருமகள் இருக்காங்க அவங்க எல்லாம் நீங்க படத்திற்கு போனது தெரிந்தால் என்ன நினைப்பார்கள் என சொல்கிறார். சின்ன பசங்க கூட வேலையில் பிசியாக இருக்கும் போது நீங்க மட்டும் எப்படி போகலாம், என்னையும் கூட்டிக் கொண்டு போயிருக்கலாம் என சிவகாமி கேட்கிறார்.
இதான் உன் ஆசையா என கேட்க, வீட்டில் இருக்கும் அனைவரும் சேர்ந்து போவோம் என சிவகாமி சொல்கிறார். பார்வதி அடிக்கடி விக்கி கனவில் வருவதை நினைத்து பார்க்க பாஸ்கர் ஏன் ஒரு போன் கூட பண்ணவில்லை என நினைத்து பார்க்கிறார். அப்போது அவரே போன் செய்ய, நேரில் பார்க்க வேண்டும் என சொல்கிறார். நாளைக்கு நேரில் பார்க்க வேண்டும் என சொல்ல, பார்வதி சரி என சொல்கிறார். பாஸ்கர் பணம் இல்லாமல் கஷ்டத்தில் இருக்க, அந்த நேரம் பார்த்து விக்கி வருகிறார்.
விக்கியை குடும்பத்தில் இருப்பவர்களிடம் அறிமுகம் செய்து வைக்க விக்கி அப்பா பற்றி கேட்கிறார். அவர் பெரிய எம்எல்ஏ என சொல்ல, பண கஷ்டம் பற்றி பேசுகிறார். உடனே விக்கி 5 லட்சத்தை கொடுத்து உதவி செய்கிறார். ஆனால் விக்கி இந்த பணத்தை பார்வதிக்காக தான் கொடுக்கிறேன் என நினைத்து பார்க்கிறார். மறுபக்கம் செந்தில் ஆதியின் வேலை பற்றி பேசிக் கொண்டிருக்க சரவணன் அங்கே வருகிறார். ஆதியிடம் படம் பார்க்க முன்பதிவு செய்ய வேண்டும் என கேட்க , நீங்க இரண்டு பேர் மட்டும் சென்று பார்க்க எதற்கு முன்பதிவு என சுந்தரம் கேட்கிறார்.
பின் அனைவரும் சேர்ந்து சினிமாவிற்கு போக இருக்கிறோம் என சரவணன் சொல்ல, சிவாகமி வருகிறார். நேற்று இரவு நாம் என்ன பேசினோம் என சுந்தரம் கேட்க, சிவகாமியும் சினிமாவிற்கு போலாம் என பேசி இருக்கிறோம் என சொல்கிறார். அனைவரும் சிரிக்க, நீங்க சொன்ன மாதிரி அதே தான் சரவணன் சொன்னார் என மயில் சொல்ல, நாளை மறுநாள் டிக்கெட் போட்டுவிடு என சரவணன் ஆதியிடம் சொல்கிறார். மயில் நானும் வருகிறேன் என சொல்கிறார்.
பார்வதி பாஸ்கரை பார்க்க செல்ல, சிவகாமியிடம் பொய் சொல்கிறார். சரவணன் வெளியே கிளம்ப சந்தியா சாப்பிட்டு விட்டு போக சொல்கிறார். நீங்க சாப்பிடுங்க என சொல்ல, இன்னைக்கு நான் தான் சமைத்தேன் அதனால் நீங்க சாப்பிட்டு எப்படி இருக்கு என சொல்லுங்க என சொல்கிறார். பின் சரவணனுடன் நானும் வருகிறேன் என சந்தியா சொல்ல, நீண்ட நேரம் ஆகும் என சரவணன் சொல்கிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.