குழந்தையை கலைக்க மருத்துவமனை செல்லும் ஜெனி செழியன், சமையலுக்கு ஏற்பாடு செய்யும் பாக்கியா – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!!

0
குழந்தையை கலைக்க மருத்துவமனை செல்லும் ஜெனி செழியன், சமையலுக்கு ஏற்பாடு செய்யும் பாக்கியா - இன்றைய
குழந்தையை கலைக்க மருத்துவமனை செல்லும் ஜெனி செழியன், சமையலுக்கு ஏற்பாடு செய்யும் பாக்கியா - இன்றைய "பாக்கியலட்சுமி" எபிசோட்!!
குழந்தையை கலைக்க மருத்துவமனை செல்லும் ஜெனி செழியன், சமையலுக்கு ஏற்பாடு செய்யும் பாக்கியா – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!!

விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், ஜெனியும் செழியனும் குழந்தையை கலைக்க மருத்துவமனைக்கு செல்கின்றனர். ஆனால் டாக்டர் முடியாது என சொல்லிவிடுகிறார்.

பாக்கியலட்சுமி:

இன்று “பாக்கியலட்சுமி” சீரியலில், அமிர்தாவை பார்த்து பாட்டி வேற வேலை எதுவும் இல்லையா இவளுடன் சேர்ந்து சமைக்க போகிறாய் என சொல்ல, ஆண்டி செய்ய இருப்பது மிகவும் நல்ல திட்டம் என அமிர்தா பெருமையாக பேசுகிறார். பின் செழியனும் ஜெனியும் குழந்தையை கலைக்க மருத்துவமனைக்கு சென்று டாக்டரை பார்க்கின்றனர். நாங்க குழந்தை வேண்டாம் என நினைப்பதாக சொல்ல, என்ன காரணம் என டாக்டர் கேட்கிறார். எனக்கு வெளிநாடு செல்ல வாய்ப்பு வந்துள்ளது. இந்த நேரத்தில் குழந்தை பெற்றுக் கொண்டால் எங்க எதிர்காலம் பாதிக்கப்படும் என சொல்கிறார்.

பாரதியை அழைத்து தனியாக பேசும் கண்ணம்மா, இருவரும் இணைவார்களா? இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!!

உடனே டாக்டர், எனக்கு 3 குழந்தைகள் இருக்கு என்னுடைய எதிர்காலம் குழந்தையால் பாதிக்கப்படவில்லை என சொல்கிறார். இதையும் மீறி உங்களுக்கு குழந்தை வேண்டாம் என்றால் நீங்க வேற டாக்டரை தான் பார்க்க வேண்டும் என சொல்லி அனுப்பிவிடுகிறார். பின் பாக்கியா சமையலுக்கு தேவையான லிஸ்ட் எழுதி வைக்கிறார். கடைக்கு சென்று மளிகை பொருள்கள் கடன் கேட்கிறார். மளிகை கடைக்காரர் யோசிக்க பாக்கியா இப்போது சிறிய அமௌன்ட் கொடுக்கிறேன் என சொல்கிறார். கடைக்காரர் சரி என சொல்கிறார்.

கண்ணனிற்கு அறிவுரை சொல்லும் ஜனார்த்தனன், கோவிலுக்கு செல்ல திட்டமிடும் குடும்பத்தினர் – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!!

அடுத்து பாக்கியா பாத்திரம் வாடகைக்கு கொடுக்கும் கடைக்கு செல்கிறார் அங்கே அவர் அட்வான்ஸ் கேட்க காசை கொடுக்காமல் இருந்தால் பாத்திரம் இல்லை என சொல்கிறார். ஆனால் பாக்கியா சிறிய காசு தான் முதலில் தர முடியும் என சொல்ல அவரும் சரி என ஒப்புக் கொள்கிறார். அப்போது தான் பாக்கியாவிற்கு நிம்மதியாக இருக்கிறது. பின் மளிகை பொருள்கள் பாத்திரங்களை பிரித்து கொடுக்க, எப்படி சமைக்க வேண்டும் என சொல்லி அனுப்புகிறார். அதில் இருவர் மட்டும் குறைய, அவருக்கு போன் செய்ய போகிறார். அந்த சமயம் பார்த்து இருவரும் வர நாங்க சமைக்கவில்லை என சொல்ல பாக்கியா அதிர்ச்சி அடைகிறார்.இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!