கண்ணனிற்கு அறிவுரை சொல்லும் ஜனார்த்தனன், கோவிலுக்கு செல்ல திட்டமிடும் குடும்பத்தினர் – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!!

0
கண்ணனிற்கு அறிவுரை சொல்லும் ஜனார்த்தனன், கோவிலுக்கு செல்ல திட்டமிடும் குடும்பத்தினர் - இன்றைய
கண்ணனிற்கு அறிவுரை சொல்லும் ஜனார்த்தனன், கோவிலுக்கு செல்ல திட்டமிடும் குடும்பத்தினர் - இன்றைய "பாண்டியன் ஸ்டோர்ஸ்" எபிசோட்!!
கண்ணனிற்கு அறிவுரை சொல்லும் ஜனார்த்தனன், கோவிலுக்கு செல்ல திட்டமிடும் குடும்பத்தினர் – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!!

விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், கண்ணனும் ஐஸ்வர்யாவும் கடைக்கு வர ஜனார்த்தனன் உன்னால் தான் உன் அம்மா இறந்துவிட்டார், இனிமேல் நீங்க இருவரும் சேர்ந்து தான் வாழ கற்றுக் கொள்ள வேண்டும் என அறிவுரை வழங்குகிறார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்:

இன்று “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், கண்ணனை கடையில் இருப்பவர் உன்னால் தான் அம்மா இறந்துவிட்டார் என சொல்ல, ஜனார்த்தனன் அவனை அடித்துவிடுகிறார். என் முன்னாடியே நீ என் சொந்தக்காரனை இப்படி பேசுவியா, இவனை திட்ட எனக்கு தான் உரிமை இருக்கிறது. இவன் என் மாப்பிளையோட தம்பி என சொல்லி சத்தம் போடுகிறார். உடனே ஐஸ்வர்யா ஜனார்தனனிற்கு நன்றி சொல்ல எங்கே போனாலும் உன்னை இப்படி தான் சொல்வாங்க,இந்த பழி உன் மீது இருந்து போகவே போகாது என சொல்கிறார்.

இனிமேல் உன்னை வீட்டில் இருப்பவர்கள் ஏற்றுக் கொள்ளவேமாட்டார்கள், இனி உன் வாழ்க்கையை நீங்க தான் பார்த்துக் கொள்ள வேண்டும் நன்றாக வேலை செய்ய வேண்டும் என சொல்கிறார். அதெல்லாம் நினைத்து கவலைப்படாமல் வேலையை நன்றாக செய்ய வேண்டும் என சொல்கிறார். கண்ணன் சரி என சொல்லிவிட்டு வேலையை தொடங்குகிறார். மறுபக்கம் முல்லை சாப்பாடு கொண்டுவர, தனம் அக்கா நீண்ட நாள் கழித்து உங்களுக்காக சமைத்திருக்கார் என சொல்கிறார்.

பாரதியை அழைத்து தனியாக பேசும் கண்ணம்மா, இருவரும் இணைவார்களா? இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!!

மூன்று பேருக்கும் முல்லை சாப்பாடு கொடுக்க, வீட்டிற்கு சென்றால் அம்மா ஞாபகம் வருகிறது என சொல்கிறார். பின் முல்லையின் அப்பா வீட்டிற்கு வர தனம் சரியாகி மூர்த்தியை சரி செய்து கடைக்கு அனுப்பிவிட்டாள் என சொல்கிறார். உடனே தனத்தின் அம்மாவும் ஆமாம் தனம் செய்தது பெரிய விஷயம் தான் என சொல்கிறார். அப்போது தனம் வர நீ செய்தது தான் சரி என சொல்ல, மனுசனா பிறந்தால் ஒரு நாள் போய் சேர வேண்டியது தான் என சொல்கிறார்.

இன்னும் 1 வாரம் தான் இருக்கிறது. என் அக்காவே வந்து மீண்டும் பிறக்க போகிறாள் என சொல்ல, உனக்கு குழந்தை பிறப்பதற்கு முன்பு கோவிலுக்கு சென்று விளக்கு போட வேண்டும் என பார்வதி சொன்னதாக சொல்கிறார். உடனே தனத்தின் அம்மா காலெண்டர் எடுத்து நாளைக்கு நல்ல நாள் என சொல்கிறார். மீனா என் அம்மா அப்பாவை கூப்பிடவா என கேட்க குடும்பத்தில் இருக்கும் அனைவரும் சேர்ந்து தான் போக வேண்டும் என சொல்கிறார்.

ஜீ தமிழ் ‘திருமதி ஹிட்லர் ‘ சீரியலில் ரீஎன்ட்ரி கொடுக்கும் நடிகை – ரசிகர்கள் கொண்டாட்டம்!

அப்போ கண்ணன் என்ன மீனா கேட்க, தனம் அவனும் தான் வருவான் என சொல்கிறார். மீனாவின் அப்பாவிடம் சொல்லி கண்ணனை அழைக்க சொல்லு என சொல்கிறார். கண்டிப்பாக சொல்றேன் என மீனா சொல்ல, எல்லா பிரச்சனையும் முடிந்து கண்ணன் இந்த வீட்டிற்கு வர வேண்டும் என முல்லையின் அப்பா சொல்கிறார். ஐஸ்வர்யா கடையில் இருக்க, மீனா போன் செய்கிறார். அதை கண்ணன் கொண்டு போய் அவரது அப்பாவிடம் கொடுக்க,நாளைக்கு கோவிலுக்கு செல்ல இருப்பதாக மீனா சொல்கிறார்.

மாமா தான் கூப்பிட சொன்னார்கள் நீங்களும் வாங்க என சொல்ல, கண்ணனையும் வர சொல்லுங்க என மீனா சொல்கிறார். சரி என ஜனார்த்தனன் சொல்ல, கண்ணன் ஐஸ்வர்யாவிடம் வீட்டில் இருப்பவர்கள் கோவிலுக்கு போறாங்க நம்மளை கூப்பிடமாட்டார்கள் என சொல்கிறார். அவர்கள் நிம்மதியாக சாமி கும்பிட நினைப்பார்கள் என கண்ணன் சொல்ல, ஜனார்த்தனன் நாளைக்கு கடை லீவு, எங்களையும் கூப்பிட்டு இருக்காங்க, உன்னையும் வர சொன்னார்கள் உனக்கு இஷ்டம் இருந்தால் வரலாம் என சொல்கிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!