தமிழகத்தில் நாளை (அக்.1) முதல் அரசு பேருந்துகள் இயக்கம் – முக்கிய அறிவிப்பு வெளியீடு!
தமிழகத்தில் கடந்த மே மாதம் விதிக்கப்பட்ட முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் காரணமாக இடைநிறுத்தி வைக்கப்பட்ட அரசு குளிர்சாதன பேருந்து சேவைகள் நாளை (அக்டோபர் 1) முதல் மீண்டுமாக துவங்க உள்ளன.
பேருந்துகள் இயக்கம்
கடந்த ஏப்ரல் மாதத்தில் தமிழகம் முழுவதும் தீவிரமடைந்து வந்த கொரோனா 2ம் அலை பரவல் காரணமாக பேருந்து போக்குவரத்து சேவைகள் முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. அந்த வகையில் மே மாதத்தில் விதிக்கப்பட்ட முழு ஊரடங்கு காலத்தில் மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான போக்குவரத்து சேவைகள் செயல்படவில்லை. இதனிடையே முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் காரணமாக தமிழகத்தில் தற்போது நோய் பரவல் தாக்கமானது வெகுவாக குறைந்துள்ளது.
அக்.1 முதல் ஏ.டி.எம் கார்டு பணப் பரிவர்த்தனைக்கு புதிய கட்டணம் – மத்திய அரசு உத்தரவு!
இதை கவனத்தில் கொண்டு கடந்த ஜூலை மாதம் முதலே பல்வேறு செயல்பாடுகளுக்கு அரசு அனுமதி கொடுத்தது. அந்த வகையில் 2 மாதங்கள் கழித்து மாவட்டங்களுக்கு இடையேயான பேருந்து போக்குவரத்து சேவைகள் அனைத்தும் 50% திறனுடன் மீண்டுமாக செயல்பட துவங்கியது. ஆனால் குளிர்சாதன பேருந்துகள் மட்டும் தொடர்ந்து இயக்கப்படாமல் இருந்து வந்தது.
வவ்வால் மாதிரிகளில் இருந்து நிபா வைரஸ் தடுப்பு மருந்து – கேரளா சுகாதாரத் துறை தகவல்!
இந்நிலையில் தமிழகம் முழுவதும் நாளை (அக்டோபர் 1) முதல் குளிர்சாதன பேருந்துகளை இயக்க அரசு அனுமதி கொடுத்துள்ளது. அந்த வகையில் தமிழகத்தில் நாளை முதல் மீண்டுமாக 702 அரசு குளிர்சாதன பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. அதாவது கொரோனா பரவல் காரணமாக கடந்த மே 10ம் தேதி முதல் நிறுத்தப்பட்டிருந்த மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களுக்கிடையேயான அரசு பேருந்து சேவைகள் முறையான கொரோனா வழிகாட்டுதல்களுடன் நாளை முதல் மீண்டும் தொடங்குகிறது.