வவ்வால் மாதிரிகளில் இருந்து நிபா வைரஸ் தடுப்பு மருந்து – கேரளா சுகாதாரத் துறை தகவல்!
கேரளா மாநிலத்தில் வௌவால்களிடம் இருந்து பரவும் நிபா வைரஸிற்கு தடுப்பு மருந்துகள் வெளவால்கள் மாதிரிகளிலிலிருந்து கண்டறியப்பட்டுள்ளதாக கேரள சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.
நிபா வைரஸ்:
நாடு முழுவதும் கொரோனா தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் சற்று மீண்டு வந்துள்ள போதும் கேரளா மாநிலத்தில் மட்டும் தொடர்ந்து கொரோனா தொற்று பரவல் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதனால் கேரளா மாநிலத்தின் எல்லைப் பகுதியில் உள்ள மாநிலங்களின் எல்லைகளிலும் தீவிரமாக கண்காணிப்பு பணிகள் நடந்து வருகிறது. இந்நிலையில், கேரளா மாநிலத்தில் மேலும் அதிக அச்சத்தை ஏற்படுத்தி வருவது நிபா வைரஸ் ஆகும்.
அக்.1 முதல் ஏ.டி.எம் கார்டு பணப் பரிவர்த்தனைக்கு புதிய கட்டணம் – மத்திய அரசு உத்தரவு!
கடந்த செப்டம்பர் 4ம் தேதி அன்று முதன்முதலாக 12 வயது சிறுவனுக்கு நிபா வைரஸ் கண்டறியப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்ட சிறுவனின் வீட்டிற்கு 3 கிலோமீட்டர் சுற்றளவிற்கு அனைத்து வீடுகளிலும் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டது. நிபா வைரஸ் என்பது வௌவால்களிடம் இருந்து மனிதர்களுக்கு பரவும் தொற்று நோயாகும். இதனால் நிபா வைரஸ் குறித்தும் மாநில அரசு தீவிர ஆய்வுகளை மேற்கொன்று வருகிறது. இந்நிலையில், கேரள சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் நிபா வைரஸுக்கு வெளவால்கள் மாதிரிகளிலிலிருந்து தடுப்பு மருந்து கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
Post Office பண பரிவர்த்தனை, ATM கார்டுகளில் புதிய மாற்றங்கள் – பயனர்கள் கவனத்திற்கு!
மேலும் செய்தியாளர்களிடம், மாநிலத்தில் முதலில் தொற்று கண்டறியப்பட்ட கோழிகோடு பகுதியிலுள்ள பல்வேறு வெளவால்களிடமிருந்து மாதிரிகள் எடுக்கப்பட்டு நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் வைராலஜி நிறுவனத்தில் பரிசோதிக்கப்பட்டது. பரிசோதனையில், இரு வேறு மாதிரிகளை பரிசோதனை செய்ததில் நிபா வைரஸுக்கு எதிரான தடுப்பு மருந்து கண்டறியப்பட்டது. மேலும் சில மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளன. அதன் முடிவுகளும் விரைவில் தெரியவுள்ளது என்று சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் கூறியுள்ளார்.