கனவை சொல்ல முடியாமல் தவிக்கும் சந்தியா, புது வண்டி வாங்க திட்டமிடும் சரவணன் – இன்றைய எபிசோட்!

0
கனவை சொல்ல முடியாமல் தவிக்கும் சந்தியா, புது வண்டி வாங்க திட்டமிடும் சரவணன் - இன்றைய எபிசோட்!
கனவை சொல்ல முடியாமல் தவிக்கும் சந்தியா, புது வண்டி வாங்க திட்டமிடும் சரவணன் - இன்றைய எபிசோட்!
கனவை சொல்ல முடியாமல் தவிக்கும் சந்தியா, புது வண்டி வாங்க திட்டமிடும் சரவணன் – இன்றைய எபிசோட்!

விஜய் டிவி “ராஜா ராணி 2” சீரியலில், சந்தியா தனது ஐபிஎஸ் கனவை பற்றி சொல்ல வருகிறார். அப்போது ஒரு பெண் போலீஸ் வந்து வெயில் அதிகமாக இருக்கிறது என சொல்லி வருத்தப்படுகிறார்.

ராஜா ராணி 2:

இன்று “ராஜா ராணி 2” சீரியலில், அனைத்து பிரச்னைகளும் சரியான சந்தோஷத்தில் சரவணன் கடையில் இருக்கிறார். அப்போது சந்தியா வருவதை பார்த்து சிரிக்கிறார். சந்தியா சரவணனிற்கு சமையல் செய்யும் போது மாட்டிக் கொள்ள கைஉறை வாங்கி வருகிறார். அதை சந்தியாவை மாட்டிவிட சொல்லி மாட்டி விடுகிறார். உடனே சர்க்கரை இதனை வருசமாக அண்ணன் இந்த வேலை பார்க்கிறார் யாருமே இதை வாங்கி கொடுத்தது இல்லை என சொல்கிறார்.

சந்தியா சரவணன் சந்தோசமாக இருப்பதை பார்த்து இது தான் சரியான நேரம் நம்ம ஐபிஎஸ் கனவை சொல்லிவிடலாம் என நினைத்து சரவணனிடம் நான் உங்களிடம் ஒரு விஷயம் பேச வேண்டும் என சொல்ல, அந்த நேரம் பார்த்து ஒரு பெண் போலீஸ் வருகிறார். அவர் வெயில் தாங்க முடியவில்லை என சொல்லி தண்ணீர் இருக்க என கேட்கிறார். உடனே சர்க்கரை தண்ணீர் எடுத்து கொண்டுவந்து கொடுக்க, அவர் பாத்ரூம் இருக்கிறதா என கேட்கிறார்.

விஜய் டிவி ‘பிக்பாஸ் 5’ இல் களமிறங்கும் பிரபல செய்தி வாசிப்பாளர் கண்மணி – உறுதி செய்த பதிவு!

உடனே சந்தியா அங்கே இருக்கிறது என காட்டுகிறார். பின் சந்தியா பாவம் கனவிற்காக எப்படி எல்லாம் கஷ்டப்பட வேண்டி இருக்கிறது என சொல்ல, சரவணன் இந்த வேலை எல்லாம் நம்ம வீட்டு பெண்களுக்கு தேவையில்லை. நல்லது கெட்டதற்கு கூட வீட்டில் இருக்க முடியாது என சொல்கிறார். உடனே சந்தியா இந்த நேரத்தில் சொல்ல கூடாது என நினைத்துவிடுகிறார். மறுபக்கம் அர்ச்சனா படத்திற்கு செல்ல செந்தில் இன்னும் போன் செய்யவில்லை என நினைக்கிறார்.

அப்போது செந்தில் போன் செய்ய அதை பார்வதி எடுத்துவிடுகிறார். உடனே பேசாமல் செந்தில் போனை வைத்துவிடுகிறார். பாஸ்கர் சோகமாக அமர்ந்திருக்க, அந்த இடத்தில் விக்கி வருகிறார். அவர் பாஸ்கரை பார்த்து என்ன ஆச்சு என கேட்க, காசு தேவைப்படுவதாக சொல்கிறார். உடனே விக்கி நான் உதவி செய்கிறேன் என சொல்கிறார். சந்தியா வீட்டிற்கு வர சிவகாமி பொருள்கள் எல்லாம் சரியாக பார்த்து வாங்கியாச்சா என கேட்கிறார்.

தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு, ஊரடங்கு நீட்டிப்பு – முதல்வர் இன்று ஆலோசனை!

சந்தியா மீதி காசை கொடுக்க, சிவகாமி காசு குறைவதாக சொல்கிறார். சந்தியா பயத்துடன் கையுறை வாங்கியதை சொல்ல சிவகாமி சந்தோசப்படுகிறார். சர்க்கரை சரவணன் சென்று கொண்டிருக்க அங்கே பைக்கில் இரண்டு காதல் ஜோடிகளை பார்த்து சர்க்கரை நீங்களும் அண்ணியும் இதே போல போக வேண்டும் நீங்க புது வண்டி வாங்குங்க என சொல்கிறார். சரவணனும் சரி என சொல்லி, இந்த வண்டியை மாத்திவிடுவோம் என சொல்கிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!