சென்னை: இன்று பெட்ரோல், டீசல் விலை அதிகரிப்பு – வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!
தமிழகத்தில் இன்றைய தினம் செப்-28 நிலவரப்படி பெட்ரோல் , டீசல் விலை சற்று அதிகரித்துள்ளது . நேற்றைய விலையை விட பெட்ரோல் 19 காசுகள் அதிகரித்து ரூ 99.15 க்கும், டீசல் 24 காசுகள் அதிகரித்து ரூ 94.17 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
பெட்ரோல், டீசல் விலை:
இந்தியன் ஆயில், பாரத், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் போன்ற பொதுத்துறை பெட்ரோல் நிறுவனங்களில் தான் பெட்ரோல், டீசல் தயாரிக்கப்படுகிறது. இத்தகைய எண்ணெய் நிறுவனங்கள் தான் ஒவ்வொரு நாளும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயம் செய்து வருகிறது. இந்தியாவில் கடந்த சில மாதங்களாக பெட்ரோல், டீசல் விலை உச்சத்தை தொட்டு 100 ரூபாய்க்கும் அதிகமாக விற்பனை செய்யப்பட்டு வந்ததது. இதற்கிடையில் தமிழக நிதித்துறை தங்களது பட்ஜெட்டை தாக்கல் செய்தது.
அக்டோபர் 11 வரை இரவு ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீட்டிப்பு – காவல் ஆணையர் அறிவிப்பு!
அத்தகைய பட்ஜெட் அறிவிப்பில் தமிழக அரசு மக்கள் நலனை கருத்தில் கொண்டு பெட்ரோல் விலை 3 ரூபாய் குறைப்பு அமல்படுத்துமாறு அறிவிப்பு வெளியிட்டது . அதனை தொடர்ந்து கடந்த சில நாட்களாக 100 ரூபாய்க்கும் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட பெட்ரோல் விலையானது 3 ரூபாய் குறைக்கப்பட்டு விற்பனையானது. நேற்று சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு 98.96 ரூபாய்க்கும், டீசல் லிட்டருக்கு 93.93 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.
தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு, ஊரடங்கு நீட்டிப்பு – முதல்வர் இன்று ஆலோசனை!
இதனை தொடர்ந்து இன்றைய நிலவரப்படி விலை சற்று அதிகரித்து காணப்படுகிறது. பெட்ரோல் லிட்டருக்கு 19 காசுகள் அதிகரித்து ஒரு லிட்டர் ரூ.99.15 க்கும், டீசல் லிட்டருக்கு 24 காசுகள் அதிகரித்து ரூ.94.17க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர்.