அக்டோபர் 11 வரை இரவு ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீட்டிப்பு – காவல் ஆணையர் அறிவிப்பு!
கொரோனா நோய்த்தொற்று நிலவரத்தை கருத்தில் கொண்டு வருகிற அக்டோபர் 11ம் தேதி வரை இரவு ஊரடங்கு மற்றும் கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்படுவதாக காவல் ஆணையர் அவர்கள் உத்தரவு பிறப்பித்து உள்ளார்.
ஊரடங்கு நீட்டிப்பு:
இந்தியாவில் கொரோனா 2வது அலையை தடுக்கும் நோக்கில் மாநில வாரியாக தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் உள்ளன. தற்போது தினசரி பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வரும் நிலையில் 3வது அலை அச்சத்தினால் சில கட்டுப்பாடுகள் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் பெங்களூருவில் இரவு ஊரடங்கு உத்தரவு உட்பட தற்போதைய கொரோனா கட்டுப்பாடுகள் அக்டோபர் 11 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக நகர காவல் ஆணையர் தெரிவித்து உள்ளார். அதாவது COVID-19 கட்டுப்பாடுகள் மேலும் பதினைந்து நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு, ஊரடங்கு நீட்டிப்பு – முதல்வர் இன்று ஆலோசனை!
இரவு ஊரடங்கு இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை மறு உத்தரவு வரும் வரை அமலில் இருக்கும். ஞாயிற்றுக்கிழமை பெங்களூருவில் 255 புதிய கொரோனா பாதிப்புகள் மற்றும் மூன்று இறப்புகள் பதிவாகியுள்ளன. பிற தளர்வுகளுக்கிடையில், மதுபான கடைகள் அக்டோபர் 3 முதல் செயல்பாடுகளைத் தொடங்க அனுமதிக்கப்பட்டு உள்ளது. பள்ளிகளில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் 1 சதவீதத்திற்கும் குறைவான நேர்மறை விகிதம் உள்ள மாவட்டங்களில் முழு பலத்துடன் நேரடி வகுப்புகளில் கலந்து கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
6 மாதங்களுக்கு பின்னர் ஒக்கேனக்கலில் சுற்றுலா – அரசு அனுமதி!
நாடு முழுவதும் கொரோனா 2வது அலை இறுதிக்கட்டத்தை எட்டி உள்ள நிலையில் தொழில் துறைகள் முழுவீச்சில் செயல்பட்டு வருகின்றன. பள்ளி, கல்லூரிகள் படிப்படியாக திறக்கப்பட்டு உள்ளன. இருப்பினும் தளர்வுகள் வழங்குவதில் மாநில / யூனியன் பிரதேச அரசுகள் கவனம் செலுத்துமாறு மத்திய அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. முகக்கவசம் அணிதல், தனிமனித இடைவெளி, கிருமிநாசினி பயன்படுத்துதல் உள்ளிட்ட வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.