தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு, ஊரடங்கு நீட்டிப்பு – முதல்வர் இன்று ஆலோசனை!
தமிழகம் முழுவதும் கொரோனா பேரலை தடுப்பு கட்டுப்பாடுகள் குறித்து முதல்வர் முக ஸ்டாலின் இன்று (செப்டம்பர் 28) ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். இதனுடன் 1 முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல்வர் ஆலோசனை
கடந்த ஏப்ரல் மாதம் முதல் தீவிரம் அடைந்து வந்த கொரோனா 2 ஆம் அலை தொற்று கட்டுப்பாடுகளாக மே மாதம் முதல் தமிழகத்தில் முழு ஊரடங்கு விதிக்கப்பட்டது. இந்த கட்டுப்பாடுகள் நிமித்தமாக கொரோனா தொற்று தற்சமயம் குறைந்ததையடுத்து ஊரடங்கில் இருந்து படிப்படியாக தளர்வுகள் அளிக்கப்பட்டது. அந்த வகையில் தற்போது வரை, வணிக நிறுவனங்கள், தியேட்டர்கள், மால்கள், சுற்றுலா தலங்கள், டாஸ்மாக் கடைகள் உட்பட அனைத்து செயல்பாடுகளுக்கும் அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக கடந்த 1 ஆம் தேதி முதல் 9 லிருந்து 12ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்காக பள்ளிகள் மீண்டுமாக திறக்கப்பட்டது. இதை தொடர்ந்து 1 முதல் 8 வரையுள்ள வகுப்புகளுக்கு பள்ளிகளை திறப்பது குறித்து பல்வேறு கட்டமாக ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது. இந்நிலையில் மீண்டுமாக ஆரம்பப்பள்ளி மாணவர்களுக்கு நேரடி வகுப்புகளை துவங்குவது குறித்து முதல்வர் முக ஸ்டாலின் இன்று (செப்டம்பர் 28) முக்கிய ஆலோசனை நடத்த இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பிரதமர் அறிமுகம் செய்த டிஜிட்டல் ஹெல்த் ஐடி – முழு விவரம்!
அதாவது தமிழகம் முழுவதும் தற்போது அமலில் இருக்கும் பொது முடக்கம் தொடர்புடைய கட்டுப்பாடுகளில் இருந்து கூடுதல் தளர்வுகளை அளிப்பது குறித்து முதல்வர் முக ஸ்டாலின் ஆலோசனை மேற்கொள்ள இருக்கிறார். இந்த கூட்டத்தில் வார இறுதி நாட்களில் மூடப்பட்டிருக்கும் மத வழிபாட்டு தலங்களை மீண்டும் திறப்பது குறித்தும், 1 முதல் 8ம் வகுப்புகளுக்கு பள்ளிகளை திறப்பது குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்பட இருக்கிறது.
பிக்பாஸ் சீசன் 5ன் தனிமைப்படுத்தப்பட்ட போட்டியாளர்கள் – யார் யாருனு பாருங்க!
குறிப்பாக நோய் தொற்று எண்ணிக்கை அதிகம் பதிவு செய்யப்பட்டு வரும் மாவட்டங்களில் கூடுதல் கட்டுப்பாடுகளை விதிப்பது மற்றும் நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவது தொடர்பாக சுகாதாரத் துறை நிபுணா்கள், அரசு அதிகாரிகளுடன் முதல்வா் முக ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்த உள்ளார். இந்த கூட்டத்துக்கு பிற்பாடு, ஊரடங்கு தொடர்புடைய அறிவிப்புகள் இன்று (செப்டம்பர் 28) மாலை வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.