பாஸ்கரை பார்வதிக்கு எதிராக மாற்றும் விக்கி, திருமணம் நடைபெறுமா? இன்றைய “ராஜா ராணி 2” எபிசோட்!
விஜய் டிவி “ராஜா ராணி 2” சீரியலில், பார்வதி மற்றும் பாஸ்கரை பிரிக்க விக்கி திட்டமிடுகிறார். அது போலவே நடக்கிறது. பின் சரவணன் கடையில் ஒருவர் பாஸ்போர்ட் தொலைத்து விட அதை அசால்ட்டாக குடும்பத்தினர் நினைக்கின்றனர்.
ராஜா ராணி 2:
இன்று “ராஜா ராணி 2” சீரியலில், அர்ச்சனா சிவகாமி திட்டியதை சொல்லி செந்திலிடம் சத்தம் போடுகிறார். உடனே செந்தில் அம்மாவை தான் இப்படி திட்டுகிறாயா என கேட்கிறார். உடனே அர்ச்சனா நடந்ததை சொல்ல நீ இப்படி செய்தால் அம்மா உன்னை பேச தான் செய்வார்கள் என சொல்கிறார். மறுபக்கம் அனைவரும் சாப்பிட்டுக் கொண்டு இருக்க சரவணன் லைசென்ஸ் எடுத்துக் கொண்டு வருகிறார். ஆதியிடம் லைசென்ஸ் வாங்குவது சுலபம் தான் என சொல்லி விட்டு யாரு எப்போ தேவை என்றாலும் என் வண்டியை எடுத்து ஓட்டலாம் என சொல்கிறார்.
பின் சிவகாமி சந்தியாவிடம் பார்த்தியா என் புள்ளையை இதெல்லாம் உனக்கு தெரியாது என சொல்கிறார். சந்தியா நடந்ததை நினைத்து பார்த்து சிரிக்கிறார். மறுபக்கம் விக்கி மற்றும் பாஸ்கர் மீட் பண்ண பார்வதி பற்றி பேசுகிறார்கள். அவர் பார்வதி என்னை தள்ளி வைக்கிறார் என சொல்ல, விக்கி பார்வதிக்கு போன் செய்து பார்க்க சொல்கிறார். பார்வதி போனை எடுக்காமல் இருக்க விக்கி பாஸ்கரை பார்வதிக்கு எதிராக திருப்புகிறார்.
மயில் மற்றும் சிவகாமி அமர்ந்திருக்க சரவணன் கடைக்கு வந்தவர் இதை விட்டு சென்றுவிட்டார் என சொல்கிறார். சிவகாமி அதை வாங்கி பார்த்து உள்ளே போட்டோ எல்லாம் இருக்கிறது என சொல்கிறார். மயில் சந்தியாவை அழைத்து வந்து இது என்ன என கேட்க இது பாஸ்போர்ட் என சொல்கிறார். உனக்கு எப்படி தெரியும் என சிவகாமி கேட்க மேலே எழுதி இருக்கிறது என சந்தியா சொல்கிறார். இது முக்கியமான ஆவணம் என சொல்ல வீட்டில் அனைவரும் வந்துவிடுகின்றனர்.
சந்தியா இதை போலீசில் ஒப்படைக்க வேண்டும் என சொல்ல, சிவகாமி இதோ ஆரம்பித்துவிட்டாள் என சண்டை போடுவது போல பேசுகிறார். உடனே சரவணனும் வேண்டும் என்றால் தேடி வரட்டும் என சொல்ல, சந்தியா இதன் முக்கியத்துவம் தெரியாமல் இப்படி இருக்காங்களே என நினைத்து வருத்தப்படுகிறார். அப்போது சரவணன் எதையோ காணோம் என தேட சந்தியா அதை எடுத்து கொடுக்கிறார். உடனே அவர் இது எவ்வளவு முக்கியமான ஆவணம் என சரவணனிடம் புரிய வைக்கிறார். பின் செந்தில் அர்ச்சனாவை கொஞ்ச இது ஆடி மாசம் என அர்ச்சனா சொல்கிறார். நீ மாசமா இருந்தால் உன்னை அம்மா எந்த வேலையும் செய்யமாட்டார்கள் என சொல்ல அர்ச்சனா அதெல்லாம் இல்லை வேலை செய்தால் தான் சுகப்பிரசவம் ஆகும் என சொல்லி தனியாக படுகிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.