குழந்தையை தூக்கிக் கொண்டு வீட்டிற்கு வரும் தனம், வாசலில் குழந்தை முகத்தை பார்த்த கண்ணன் – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!
விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், தனம் குழந்தையை தூக்கிக் கொண்டு வருவதாக சொல்ல வீட்டில் அனைவரும் ஏற்பாடு செய்கின்றனர்.
பாண்டியன் ஸ்டோர்ஸ்:
இன்று “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், தனம் வீட்டிற்கு குழந்தையை தூக்கிக் கொண்டு வருவதால் முல்லை வீட்டை கழுவி விடுகிறார். அப்போது கதிர் அங்கே வர கால் வழுக்கி விழ போகிறார். அப்போது முல்லை அவரை பிடிக்க கஸ்தூரி மற்றும் மீனா கிண்டல் செய்கிறார்கள். பின் கஸ்தூரிக்கு போன் வருகிறது. அதில் தனம் வருவதாக சொல்கின்றனர். அதனால் கஸ்தூரி முல்லையிடம் எல்லா ஏற்பாடும் செய்ய சொல்கிறார். கதிர் வேறு எதாவது செய்ய வேண்டுமா என கேட்க அவரை நக்கலடித்துவிடுகிறார்.
பின் கண்ணன் காலையில் கிளம்பிக் கொண்டிருக்க ஐஸ்வர்யா பக்கத்து வீட்டில் பேசிவிட்டு வருகிறார். அப்போது தனம் அக்கா இப்போ வீட்டிற்கு வந்துருவாங்க என சொன்னதை சொல்கிறார். உடனே கண்ணன் குழந்தையை பார்க்க வேண்டும் என ஆவலுடன் இருக்க உனக்கு காதிருவங்களா என ஐஸ்வர்யா கேட்கிறார். நான் வேண்டும் என்றால் தூக்கிக் கொண்டு வரவா என கேட்க கண்ணன் அதெல்லாம் ஒன்றும் வேண்டாம் என சொல்கிறார்.
ஹேமாவிடம் உண்மையை சொல்ல போகும் கண்ணம்மா, தடுக்க வரும் சௌந்தர்யா – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!
பின் கதிர் வாசலில் நின்று அண்ணி வருகிறார்களா என பார்க்க மீனா கதிரை கிண்டல் செய்கிறார். அப்போது கண்ணனும் குழந்தையை பார்க்க வாசலில் காத்துக் கொண்டிருக்கிறார். அந்த நேரம் பார்த்து தனம் வர ஆரத்தி எடுத்து வீட்டிற்குள் அழைத்து செல்கின்றனர். தனம் குழந்தையை பார்க்க கண்ணன் இருக்க, வாசலில் நின்று குழந்தை முகத்தை கண்ணன் பார்க்கும் படி தனம் செய்கிறார். பின் கண்ணன் குழந்தையை பார்த்து அண்ணி மாதிரியே இருக்கான் பாரு என சந்தோசப்படுகிறார்.
வீட்டிற்கு வந்ததும் மூர்த்தி லட்சுமி அம்மா வீல் சேர் எடுத்து வருகிறார். அதில் அம்மாவின் போட்டோவை வைத்து இப்படி இவனை பார்க்காமல் சென்றுவிட்டிர்கள் என வருத்தப்படுகிறார். தனம் அதை நினைத்து அழ தனத்தின் அம்மா சாமந்தி அம்மாவிற்கு அதற்கு குடுத்து வைக்கவில்லை என சொல்கிறார். உடனே முல்லை அத்தை இங்க தான் இருப்பாங்க என சொல்ல, மூர்த்தி நீங்க சொன்னதை நம்பி நாங்க தைரியமாக இருக்கோம் உங்க ஆசிர்வாதம் என் குழந்தைக்கு வேண்டும் என சொல்கிறார்.
TN TRB ஆசிரியர்களின் நேரடி பணி நியமன வயது வரம்பு உயர்வு – தமிழக அரசு ஆணை!
குடும்பத்தில் அனைவரும் குழந்தையை பார்க்க முல்லை வீட்டில் அனைவருக்கும் ஸ்வீட் கொடுக்கிறார். மூர்த்தி கடைக்கு போய்விட்டு மூர்த்தி சீக்கிரமாக வர, மீனா அம்மா தான் மருத்துவமனைக்கு சாப்பாடு கொண்டு வந்தார் என தனம் சொல்ல, சாப்பாடு நன்றாக இருந்தது ஆனால் முல்லை சமைத்தது தான் நன்றாக இல்லை என கஸ்தூரி சொல்கிறார். பின் முல்லை கோவித்து கொள்ள, மீனா அம்மா சாப்பாடு நன்றாக இல்லை என சொல்கிறார். உடனே மீனாவும் கோவித்து கொள்கிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.