ஹேமாவிடம் உண்மையை சொல்ல போகும் கண்ணம்மா, தடுக்க வரும் சௌந்தர்யா – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!

0
ஹேமாவிடம் உண்மையை சொல்ல போகும் கண்ணம்மா, தடுக்க வரும் சௌந்தர்யா - இன்றைய
ஹேமாவிடம் உண்மையை சொல்ல போகும் கண்ணம்மா, தடுக்க வரும் சௌந்தர்யா - இன்றைய "பாரதி கண்ணம்மா" எபிசோட்!
ஹேமாவிடம் உண்மையை சொல்ல போகும் கண்ணம்மா, தடுக்க வரும் சௌந்தர்யா – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!

விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில், கோவிலுக்கு குழந்தைகளை கூட்டிக் கொண்டு வரும் கண்ணம்மா ஹேமாவிடம் அவளது அம்மா பற்றி கேட்கிறார். அப்போது சௌந்தர்யா அங்கே வந்து கண்ணம்மாவை தடுக்கிறார்.

பாரதி கண்ணம்மா:

இன்று “பாரதி கண்ணம்மா” சீரியலில், கண்ணம்மா ஹேமா மற்றும் லட்சுமியை அழைத்துக் கொண்டு கோவிலுக்கு வருகிறார். சாமி கும்பிட்டுவிட்டு மூவரும் அமர கண்ணம்மா ஹேமாவிடம் உன் அம்மாவை நீ பார்த்ததே இல்லையா என கேட்கிறார். உடனே ஹேமா ஆமாம் அம்மாவை பார்த்ததே இல்லை என சொல்ல, ஒரு போட்டோ கூட பார்த்தது இல்லையா என கேட்கிறார். எங்க வீட்டில் நிறைய அம்மாவின் புடவை மற்றும் போட்டோ இருந்தது.

ஆனால் நான் அதை பார்த்து அம்மா பற்றி கேட்பேன் என்பதால் அதை எல்லாம் அப்பா எரித்துவிட்டார் என சொல்லி வருத்தப்படுகிறாள். அம்மா நான் பிறக்கும் போதே சாமிகிட்ட போய்ட்டாங்களாம் அதுனால நானும் அம்மா பற்றி கேட்கமாட்டேன் என ஹேமா சொல்ல, கண்ணம்மா அதிர்ச்சி அடைந்து உன் அம்மா வேற யாருமில்லை என கண்ணம்மா சொல்ல வர அங்கே சௌந்தர்யா வருகிறார். சமையல் அம்மா என கூப்பிட்டு அவள் சொல்ல வந்ததை நிறுத்த, சமையல் அம்மா தான் உனக்கு அம்மா எல்லாமே என சௌந்தர்யா சொல்கிறார்.

‘ஒரே நாடு ஒரே கார்டு’ திட்டத்தில் மேலும் புதிய கட்டுப்பாடுகள் – மாநில அரசுகளுடன் மத்திய அரசு ஆலோசனை!

பின் லட்சுமி மற்றும் ஹேமாவை விளையாட அனுப்பிவிட்டு, சௌந்தர்யா பேச தொடங்குகிறார். ஹேமாவிடம் எதற்கு உண்மையை சொல்கிறாய் என கேட்க, சொன்னால் என்ன தப்பு என கண்ணம்மா கேட்கிறார்.உடனே சௌந்தர்யா நீ 4 நாள் டைம் கொடுத்திருக்கேன் அதுக்கு அப்பறம் நான் எதாவது செய்வேன் அதுக்குள்ள என்ன என கேட்கிறார். ஒரு அரை மணி நேரம் என் பொண்ணை என்னிடம் இருக்கவிடமாட்டீங்க என கேட்க, பாரதி வெளியே போக வேண்டும் என ஹேமாவை அழைத்து கொண்டு வர சொன்னான் என சொல்கிறார்.

உடனே கண்ணம்மா உங்களை நம்ப முடியாது நான் பெற்ற குழந்தையை தொப்புள்கொடி ஈரம் காய்வதற்கு முன்பாக திருடி கொண்டு சென்றிருக்கிர்கள். உங்க புள்ள ஹேமாவிடம் அம்மா சாமிகிட்ட போய்ட்டாங்க என சொல்லி இருக்கிறார். அதை எல்லாம் பார்த்து சும்மா தான இருக்கீங்க என கேட்கிறார். நான் என்ன தப்பு பண்ணேன் என கேள்வி மேலே கேள்வி கேட்கிறார். நான் ஹேமாவை பிரித்து அவளது அப்பாவிடம் தான் அனுப்பிருக்கேன் என சௌந்தர்யா சொல்ல, அப்போ அவர் பெற்ற பொண்ணு தான் என அவரிடம் சொல்லுங்க என சொல்கிறார்.

கேரள முதலமைச்சர் நிவாரண நிதிக்கு திமுக ரூ.1 கோடி – கனமழை, வெள்ளம் பாதிப்பு!

உடனே சௌந்தர்யா இவளிடம் பேச முடியாது என நினைத்து ஹேமாவை அழைத்து கொண்டு அங்கிருந்து செல்கிறார். மறுப்பக்கம் பாரதி என்ன நடக்கிறது என தெரியாமல் இருக்க வேணு பாரதி கண்ணில் படாமல் செல்கிறார். உடனே பாரதி அம்மா எங்கே என அஞ்சலியிடம் கேட்க எனக்கு தெரியாது என சொல்கிறார். அப்போது ஹேமா அங்கே வர, உன்னை தனியா அனுப்பிவிட்டு பாட்டியும் அந்த சமையல் அம்மாவும் பேசிருப்பாங்களே என கேட்கிறார். உடனே ஹேமா ஆமாம் என சொல்ல, இப்ப அதே போல தனியா போ நான் பேசிவிட்டு வருகிறேன் என சொல்கிறார்.

கண்ணம்மா ஏன் அடிக்கடி இந்த வீட்டிற்கு வருகிறாள் அவளிடம் அப்படி என்ன பேசுனீங்க என கேட்க, சௌந்தர்யா அவளின் இன்னொரு குழந்தை தேடி கோவில்களில் அலைகிறாள். அதான் அவளுக்கு ஆறுதல் சொல்லிவிட்டு வருகிறேன் என சௌந்தர்யா சொல்கிறார். அன்னைக்கு ஹேமாவை கொஞ்சுகிறாள் இன்னைக்கு கோவிலுக்கு கூட்டிக் கொண்டு செல்கிறார் என்ன இது என கேட்க எனக்கு தெரியாது என சௌந்தர்யா சொல்கிறார். அவளை சாதாரணமாக விட கூடாது விட்ட தொலைந்து போன குழந்தை ஹேமா என்று சொல்வாள் என சொல்ல, அப்படி சொன்னால் நான் மனிதனாக இருக்கமாட்டேன் என பாரதி சொல்கிறார். இனிமேல் நீங்க அவளுடன் பேசுவதை நிறுத்துங்க என சொல்கிறார். என்னைக்காவது எனக்கு கோவம் வந்து அவளை விரட்ட போகிறேன் என பாரதி சொல்கிறார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!