TN TRB ஆசிரியர்களின் நேரடி பணி நியமன வயது வரம்பு உயர்வு – தமிழக அரசு ஆணை!
தமிழகத்தில் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு நேரடி பணி நியமன வயது வரம்பு ஐந்து வருடங்கள் வரை அதிகரித்து தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது.
நேரடி பணி நியமனம்:
தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றுவதற்கான ஆசிரியர்களை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் போட்டித்தேர்வு மூலமாக தேர்வு செய்யப்படுகிறார்கள். கடந்த ஆண்டு வரை முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கான வயது வரம்பு 57 ஆக இருந்தது. ஆனால் அரசு தமிழ்நாடு மேல்நிலை கல்வி பணி விதிகளில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் சிறப்பு விதிகளை சேர்த்து மாற்றங்களை அறிவித்தது.
கேரள முதலமைச்சர் நிவாரண நிதிக்கு திமுக ரூ.1 கோடி – கனமழை, வெள்ளம் பாதிப்பு!
இதனால் ஆசிரியர் பணிக்கான வயது வரம்பு 40 மற்றும், இட ஒதுக்கீடு பிரிவினருக்கு 45 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டது. கடந்த ஆண்டு அரசு மாற்றியமைத்த விதியின் படி பொதுப் பிரிவினருக்கு 40, இட ஒதுக்கீட்டு பிரிவினருக்கு 45 என வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டது. அரசின் இந்த அறிவிப்பினால் 45 வயதை கடந்த தேர்வர்கள் பலரும் பெருத்த ஏமாற்றம் அடைந்தனர். இதனால் வயது வரம்பை அதிகரிக்குமாறு தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.
நாடு முழுவதும் 98 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி – மத்திய அரசு சாதனை!
இது தொடர்பாக, நீதிமன்றங்களில் வழக்கு தொடரப்பட்டு, இது முழுக்க அரசின் முடிவு என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்நிலையில், ஆசிரியர்களின் நேரடி பணி நியமன வயது பொதுப்பிரிவினருக்கான வயது 40 லிருந்து 45 ஆக உயர்த்தப்படுவதாகவும், இதர பிரிவினருக்கு வயது 45 லிருந்து 50 ஆக உயர்த்தப்படும் என்றும் தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது. மேலும், ஜனவரி 1 ஆம் தேதி 2023 ஆம் வருடம் முதல் பொதுப்பிரிவினருக்கு உச்ச வரம்பு 42 வயதாகவும், இதர பிரிவினருக்கு 47 வயதாகவும் உச்ச வரம்பு இருக்கும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.