பார்வதியை மீண்டும் மிரட்டும் விக்கி, புது வண்டியை பார்த்து சந்தோசப்படும் குடும்பத்தினர் – இன்றைய “ராஜா ராணி 2” எபிசோட்!
விஜய் டிவி “ராஜா ராணி 2” சீரியலில், பார்வதிக்கு பாஸ்கர் தங்க மோதிரம் வாங்கி தருகிறார். பின் நான் தான் பணம் கொடுத்தேன் என விக்கி பார்வதியை மிரட்டுகிறார். சந்தியாவும் சரவணனும் புது வண்டி வாங்கி வருகிறார்.
ராஜா ராணி 2:
இன்று “ராஜா ராணி 2” சீரியலில், பாஸ்கர் பார்வதியை நகைகடைக்கு அழைத்து வந்து தங்க மோதிரம் வாங்கி தருகிறார். அதை வாங்கி கொண்டு பார்வதி எங்க வீட்டிற்கு தெரிந்தால் என்ன ஆகுமோ என நினைத்து பயத்தில் இருக்கிறார். பின் பார்வதி வீட்டிற்கு வந்து கொண்டிருக்க, அந்த வழியில் விக்கி வருகிறார். பார்வதியிடம் பாஸ்கர் நகை வாங்கி கொடுத்தானா இதை பார்த்தால் உன் வீட்டில் திட்டமாட்டாங்களா என கேட்கிறார். உடனே பார்வதி அவங்க பாஸ்கர் வாங்கி கொடுத்தது என சொன்னால் சந்தோசமாக இருப்பார்கள் என சொல்கிறார்.
பின் விக்கி உன் பாஸ்கர் உனக்கு வாங்கி கொடுத்தது என் பணத்தில் தான் நான் தான் பாஸ்கருக்கு பணம் கொடுத்தேன் என சொல்கிறார். அதை கேட்டு பார்வதி பயப்படுகிறார். நான் பாஸ்கரிடம் நீ சொல்வது உண்மையா என கேட்கிறேன் என சொல்ல, கேளு என விக்கி சொல்கிறார். உனக்கு எப்படி கல்யாணம் நடக்கிறது என நான் பார்க்கிறேன் என மிரட்டுகிறார். அதை கேட்டு பார்வதி பயத்தில் இருக்க, மறுபக்கம் சந்தியா சரவணனும் வண்டியை வீட்டிற்கு கொண்டு வந்து நிறுத்துகின்றனர்.
அப்போது மயில் அதை பார்த்து சந்தோசப்பட வீட்டிற்குள் இருந்து சரவணன் அப்பா வருகிறார். உடனே கடைக்கு சென்றுவிட்டு சிவகாமி வர புது வண்டியை பார்த்து சந்தோசத்தில் இருக்கின்றனர். பின் பூஜை போட ஆதி வண்டி ஓட்ட தெரியாது என கிண்டல் செய்கிறார். உடனே சந்தியாவிற்கு கோவம் வர, அவர் சீக்கிரத்தில் எப்படி ஓட்டுகிறார் என பாரு என சொல்கிறார். பின் செந்தில் அர்ச்சனாவிடம் உடனே வண்டி வாங்கிவிட்டான் என சொல்ல அர்ச்சனா நம்ம ஒரு வண்டி வாங்கலாம் என சொல்கிறார்.
எதிர் வீட்டில் வந்ததை நினைத்து சந்தோசப்படும் கண்ணன் – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!!
ஆனால் செந்தில் என்னிடம் காசு இல்லை என சொல்லிவிட்டு, சரவணன் எப்படியும் வண்டியை ஓட்டமாட்டான் நான் அல்லது ஆதி தான் ஓட்டுவோம் என சொல்கிறார். உடனே அர்ச்சனா பேச்சை கேட்காததால் கோவத்தில் படுக்க செல்ல, சரவணன் மிகுந்த சந்தோஷத்தில் இருக்கிறார். சந்தியா என்ன ரொம்ப சந்தோசம் போல என கேட்க, ஆமாம் என சொல்கிறார் சரி இப்பவே வண்டியில் என்ன இருக்கிறது என கற்றுக் கொடுக்கிறேன் என சொல்லி வண்டியை பார்க்க சந்தியா அழைத்து செல்கிறார். அப்போது சரவணனிற்கு வண்டியில் இருப்பதை சொல்லிக் கொடுக்க, சந்தியாவை மட்டுமே சரவணன் பார்த்து அவர் மீது தூங்கி விடுகிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.