எதிர் வீட்டில் வந்ததை நினைத்து சந்தோசப்படும் கண்ணன் – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!!
விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், கஸ்தூரி கண்ணன் எதிர் வீட்டில் வந்ததை பற்றி மூர்த்தி வீட்டில் மாட்டிவிடுகிறார். பின் எதிர் வீட்டில் வந்ததை நினைத்து கண்ணன் சந்தோஷத்தில் இருக்கிறார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ்;
இன்று “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில்,கஸ்தூரி தனத்தின் வீட்டிற்கு சென்று பார்க்கிறார். அப்போது ஜீவாவும் கதிரும் இவங்களே எதிர் வீட்டில் குடி வைத்துவிட்டு வேண்டும் என்றே வந்து பேசுகிறார் என சொல்கிறார். பின் கஸ்தூரி அவன் உங்களிடம் சண்டை போட வேண்டும் என்பதற்காக தான் எதிர் வீட்டில் வந்திருக்கிறான் என சொல்ல, மூர்த்தி யார் எங்கே வந்தால் என்ன இந்த வீட்டிற்குள் வர தான் என்னுடைய அனுமதி வேண்டும் என சொல்கிறார்.
பின் மூர்த்தி கதிர் ஜீவா கடைக்கு போக கண்ணன் வெளியே நின்றுக் கொண்டிருந்த பைக்கை துடைக்கிறார். பின் மூர்த்தி முதலில் செல்ல பைக் எடுக்க, வழியில் சின்ன கல்லு கிடக்கிறது. அதை கண்ணன் ஓடி வந்து எடுக்கிறார். பின் கதிர் ஜீவா கிளம்ப கண்ணன் டாட்டா சொல்கிறார். கதிர் அவரை திரும்பி பார்த்தபடி செல்கிறார். பின் ஐஸ்வர்யா வந்ததும் காலேஜ் கிளம்ப சொல்கிறார்.வீட்டை பூட்டிவிட்டு வெளியே செல்ல, அண்ணிகளிடம் சொல்லிவிட்டு தான் வருவேன் என கண்ணன் சொல்கிறார்.
ஹேமா தன்னுடைய குழந்தை தான் என்ற உண்மையை அறிந்த கண்ணம்மா – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!!
உடனே ஐஸ்வர்யா இப்படியே கத்தி சொல்லுங்க அவங்களுக்கு கேக்கும் என சொல்ல, கண்ணன் நான் காலேஜ் போய்ட்டுவரேன் என கத்தி சொல்கிறார். உடனே தனம் யாரு இப்படி கத்துவது என கேட்க, வேற யாரு கண்ணன் தான் என மீனா சொல்கிறார். பின் ஐஸ்வர்யாவிடம் கண்ணன் சந்தோஷத்தில் இருக்க, இப்ப தான் உன் முகம் பார்க்க நன்றாக இருக்கிறது என ஐஸ்வர்யா சொல்கிறார். பின் இரவு நீண்ட நேரம் ஆகியும் கண்ணன் வராததை நினைத்து தனம் பதட்டத்தில் இருக்க, கதிர் என்ன இந்த நேரத்தில் இங்கே நடந்துக் கொண்டிருக்கீங்க என கேட்கிறார்.
கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதோருக்கு ஷாக் அறிவிப்பு – 2 மாதங்களில் 87% பேர் உயிரிழப்பு!
உடனே கண்ணன் மற்றும் ஐஸ்வர்யா வர, ஒருவேளை நமக்காக தான் நிற்கிறார்களோ என சந்தேகத்தில் இருக்கிறார். அப்போது கதிர் கண்ணன் வீடு பூட்டிருக்கிறது இன்னும் வேலை விட்டு வரவில்லை என கதிர் கேட்கிறார். உடனே தனம் அதான் எனக்கும் தெரியவில்லை, நானும் பார்த்துக் கொண்டிருக்கேன் என சொல்கிறார். உடனே கதிர் அதற்கு தான் வெளியே நிற்கிறீங்களா என கேட்க, கண்ணன் எல்லாரும் சாப்டாச்சா என கத்துகிறார். நாங்க சாப்பாடு வாங்கிவிட்டோம் என கண்ணன் சொல்ல, கதிர் இதான் வாக்கிங்கா என கேட்கிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.