ஹேமா தன்னுடைய குழந்தை தான் என்ற உண்மையை அறிந்த கண்ணம்மா – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!!

0
ஹேமா தன்னுடைய குழந்தை தான் என்ற உண்மையை அறிந்த கண்ணம்மா - இன்றைய
ஹேமா தன்னுடைய குழந்தை தான் என்ற உண்மையை அறிந்த கண்ணம்மா - இன்றைய "பாரதி கண்ணம்மா" எபிசோட்!!
ஹேமா தன்னுடைய குழந்தை தான் என்ற உண்மையை அறிந்த கண்ணம்மா – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!!

விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில், கண்ணம்மாவிடம் ஹேமா தான் நீ பெற்ற குழந்தை என்ற உண்மையை சௌந்தர்யா சொல்கிறார். பின் கண்ணம்மாவிடம் என்ன நடந்தது என சொல்ல, கண்ணம்மா நன்றி சொல்கிறார்.

பாரதி கண்ணம்மா:

இன்று “பாரதி கண்ணம்மா” சீரியலில், கண்ணம்மாவிடம் சௌந்தர்யா ஹேமா தான் உன்னுடைய குழந்தை என்ற உண்மையை சொல்கிறார். உடனே கண்ணம்மா என்ன சொல்வதென்று தெரியாமல் ஹேமாவா என கேட்டு அதிர்ச்சி அடைகிறார். பின் கண்ணம்மா ஹேமா உடன் இருந்த சந்தோசமான தருணங்களை நினைத்து பார்க்கிறார். பின் சௌந்தர்யாவிடம் நீங்க சொன்னது உண்மையா என கேட்டு சத்தியம் கேட்கிறார். ஆமாம் என சத்தியம் செய்ய, கண்ணம்மா கிழே விழுந்து கதறி அழுகிறார்.

என் குழந்தையை எப்படி நீங்க தூக்கிக் கொண்டு போனீங்க என கண்ணம்மா கேட்க, சௌந்தர்யா நடந்ததை சொல்கிறார். நான் தான் உனக்கு பிரசவம் பார்த்தேன் என சௌந்தர்யா சொல்ல, கண்ணம்மா பாரதி தான் பிரசவம் பார்த்தார் என சொல்கிறார். எது உண்மை என கண்ணம்மா கேட்கிறார். இரண்டுமே உண்மை என சௌந்தர்யா நடந்ததை சொல்கிறார். மருத்துவமனையில் நீ பிரசவ வலியில் துடிக்கும் போது அங்கே எந்த டாக்டரும் இல்லை வெண்பா மட்டும் தான் இருந்தால் அவளிடம் நான் சொல்லிவிட்டு கோவிலுக்கு சென்றேன் நான் வந்து பார்க்கும் போது உனக்கு குழந்தை இருந்தது என சொல்கிறார்.

சன் டிவி ‘கண்ணான கண்ணே’ சீரியல் நடிகர், நடிகைகளின் ஒருநாள் சம்பளம் – ரசிகர்கள் அதிர்ச்சி!

ஆனால் அதன் பின் உனக்கு மீண்டும் பிரசவ வலி வந்தது அப்போது தான் ஹேமா பிறந்தாள், அப்பறம் நீ மயக்கத்தில் இருந்த அதனால் தான் நான் அங்கிருந்து ஹேமாவை தூக்கிக் கொண்டு பாரதியிடம் சென்று கொடுத்து தத்து எடுத்து வளர்க்க சொன்னேன், உன்னை பிரிந்து மன வருத்தத்தில் இருந்த பாரதி அனைத்து பாசத்தையும் அந்த குழந்தை மீது கொட்டி வளர்த்தான். உன் குழந்தை எங்கேயும் இல்லை அவளுடைய அப்பா விடமும், சொந்த தாத்தா பாட்டியிடமும் சந்தோசமாக கார் வீடு என எல்லா வசதியுடனும் வளர்க்கிறார் என சௌந்தர்யா சொல்கிறார்.

உடனே கண்ணம்மா என் குழந்தை உங்களிடம் வளர்கிறதா என கேட்டு சந்தோஷத்தில் இருக்க, ரொம்ப நன்றி அத்தை என சொல்கிறார். ஆனால் என்னிடம் இருந்து ஏன் என் குழந்தையை பிரித்து கொண்டு சென்றிங்க அவ என்னிடம் தாய் பால் கூட குடித்திருக்கமாட்டாள் அம்மா முகம் எப்படி இருக்கிறது என தெரியாமல் வளர்க்கிறார். இப்படிப்பட்ட பாவத்தை ஏன் செய்தீர்கள் என கேட்கிறார். நீயும் பாரதியும் இந்த குழந்தைகள் முகத்திற்காக ஒரு நாள் சேருவீர்கள் என்ற நம்பிக்கையில் தான் இப்படி செய்தேன் என சௌந்தர்யா சொல்ல, உங்க மீது எனக்கு பயங்கரமாக கோவம் வருகிறது ஆனால் என் குழந்தை பற்றி சொன்னதால் நான் இப்போது சும்மா விடுகிறேன் என கண்ணம்மா சொல்கிறார்.

தமிழகத்தில் நாளை (அக்.11) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!

பின் சௌந்தர்யா அதெல்லாம் இருக்கட்டும், உன் குழந்தை பெயரை சொல்லி உன்னை மிரட்டியது யார் என சௌந்தர்யா கேட்கிறார். நீ விவாகரத்து வாங்கினால் தான் உன் குழந்தையை கொடுப்பேன் என சொல்லி மிரட்டியது யார் என சௌந்தர்யா கேட்க, கண்ணம்மா எதுவும் சொல்லாமல் அதெல்லாம் ஒன்றுமில்லை விடுங்க அத்தை என சொல்கிறார். உடனே சௌந்தர்யா அது யார் என எனக்கு தெரியும் வெண்பா தான என சொல்ல, கண்ணம்மா ஆமாம் என சொல்கிறார். நண்பர் என சொல்லிக் கொண்டு உங்க இருவரையும் பிரிக்க அவ இதெல்லாம் செய்கிறாளா என சொல்லி அவளை என்ன செய்கிறேன் என பாரு என சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்புகிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!