கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதோருக்கு ஷாக் அறிவிப்பு – 2 மாதங்களில் 87% பேர் உயிரிழப்பு!
தமிழகத்தில் கொரோனா தொற்று நோய்க்கு எதிரான தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் மிகவும் கவனிக்க வேண்டிய அரசின் அறிக்கை ஒன்று மருத்துவத்துறையில் வெளியிடப்பட்டுள்ளது.
மருத்துவ அறிக்கை:
தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு தற்போது நல்ல முறையில் குறைந்து மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. இருப்பினும், நோய் தொற்று மேலும் பரவாமல் இருப்பதற்காக அரசு பல நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. மேலும், மக்களை தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்கு ஊக்குவிக்கும் வகையில் பல மெகா தடுப்பூசி முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இதனால் அரசு நிர்ணயிக்கும் இலக்கில் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது.
TCS நிறுவன வேலைவாய்ப்பு 2021 – டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
இந்நிலையில், தமிழகத்தில் கடந்த ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் கொரோனா தொற்று மூலம் உயிரிழந்தவர்களின் விவரங்கள் தமிழக மருத்துவ துறையினரால் அறிக்கையாக வெளியிடப்பட்டுள்ளது. அரசு அறிக்கையின் படி, ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் கொரோனா தொற்றுக்கு 88,719 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில், 63% பேர் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள். 24% பேர் ஒரு டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் என்றும், 13% முழுமையாக 2 டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சன் டிவி ‘கண்ணான கண்ணே’ சீரியல் நடிகர், நடிகைகளின் ஒருநாள் சம்பளம் – ரசிகர்கள் அதிர்ச்சி!
இவர்களில், தொற்று பாதிப்பு அதிகரிப்பினால் ஐசியூவில் அனுமதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,816 என்றும், அதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,626 ஆகவும் உள்ளது. இந்த அறிக்கையில், உயிரிழந்தோரில் 87% பேரும், ஐசியூவில் அனுமதிக்கப்பட்டோரில் 76% பேரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களும் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களும் உரிய பாதுகாப்பது நடவடிக்கைகளை முறையாக கடைபிடிக்க வேண்டும் என்று மருத்துவர் அறிவுறுத்துகின்றனர்.