விஜய் டிவி ‘ராஜா ராணி 2’ சீரியலில் இனி 2 சந்தியாவா? குழப்பத்தில் ரசிகர்கள்!
விஜய் டிவி ‘ராஜா ராணி 2’ சீரியலில் இருந்து ஆலியா மானஸா விலகிய நிலையில் அவருக்கு பதிலாக சந்தியாவாக நடிகை ரியா அறிமுகமாகி இருக்கிறார். இருப்பினும் இந்த சீரியலில் 2 சந்தியா கதாப்பாத்திரம் இடம்பிடிக்குமோ என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
ராஜா ராணி 2
தமிழ் சின்னத்திரையில் அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி கொண்டிருக்க கூடிய ஒரு முக்கியமான சீரியல் ‘ராஜா ராணி 2’ என்று சொல்லலாம். இதுவரை கணவர் சரவணன் குடும்பத்திற்காக தனது IPS கனவை சந்தியா மறைத்து வர, அதனை அறிந்து கொள்ளும் சரவணன் அந்த கனவை நிறைவேற்றுவதாக ப்ராமிஸ் செய்கிறார். அதே போல சந்தியாவின் போலீஸ் லட்சியம் பற்றி சிவகாமியிடம் பேசும் போது நோ மீன்ஸ் நோ என்று சந்தியாவின் கனவுக்கு தடாலடியாக முட்டு கட்டை போடுகிறார் அவர். இப்போது என்ன செய்வது என்று தெரியாமல் இருக்க, கிடைத்த ஒரு சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்துகிறார் சரவணன்.
அதாவது, போலீஸ் ஸ்டேஷனில் இருக்கும் போது அங்கு நடக்கும் சில அராஜரங்களை கூறி சந்தியாவை போலீஸ் படிப்பை முடிக்க சம்மதிக்க வைக்கிறார் சரவணன். இது சிவகாமிக்கு தெரிந்தால் அவர்களுக்கு பொங்கல் வைத்து விழா எடுத்து கொண்டாடி விடுவார் என்பது வேறு கதை. இப்படி இருக்க இந்த ‘ராஜா ராணி 2’ சீரியலில் ஒரு பெரிய பிரேக் நடந்திருக்கிறது. அதாவது, ‘ராஜா ராணி 2’ சீரியலில் இதுவரை சந்தியாவும், சந்தியாவின் போலீஸ் கனவு என்று பார்த்து கொண்டிருந்த கதைக்களத்தில் ஒரு முக்கிய மாற்றம் நடந்திருக்கிறது.
அது என்னவென்றால் நடிகை ஆலியா மானஸாவை இனிமேல் நாம் சந்தியாவாக பார்க்க முடியாது. பிரசவத்திற்காக இந்த சீரியலை விட்டு சில காலத்திற்கு ஓய்வு எடுக்க சென்ற ஆலியாவுக்கு பதிலாக இத்தொடரில் ரியா என்பவர் தற்போது நடித்துக் கொண்டிருக்கிறார். இவர், ஆலியா அளவுக்கு இல்லை என்றாலும் நடை, உடை, பாவனை என ஏதோ ஒரு அளவுக்கு அவரை மேட்ச் செய்து வருகின்றனர் சீரியல் குழுவினர். இதற்கிடையில் பிரேக் முடித்து ஆலியா மானஸா திரும்ப சீரியலுக்கு வருவாரா அல்லது ரியாவே தொடருவாரா என்றும் ஆலியா மற்றும் ரியா என 2 சந்தியாவை வைத்து இக்கதைக்களம் செல்லுமா என்றும் ரசிகர்கள் சந்தேகங்களை கிளப்பி இருக்கின்றனர்.