மீண்டும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ குடும்பத்துடன் இணையப்போகும் தீபிகா – இணையத்தில் லீக்கான தகவல்!
முகப் பரு பிரச்சனையால் சில மாதங்களுக்கு முன்பு பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் இருந்து விலகிய தீபிகா தற்போது மீண்டும் சிகிச்சைக்கு பிறகு பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்துடன் இணையப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாண்டியன் ஸ்டோர்ஸ்:
விஜய் தொலைக்காட்சியில் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது. முல்லைக்கு தற்போது தான் அனைத்து விஷயங்களும் தெரிய வந்துள்ளது. அதாவது தன்னால் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாது என்கிற உண்மையை அறிந்துகொண்டு கலங்கி நிற்கிறார். இவருக்கு கதிர் முழுக்க முழுக்க ஆதரவாக இருக்கிறார். குழந்தை பிறக்காது என்பதை அறிந்து மனதை தேற்றிக்கொள்வார்களா அல்லது அதற்கான சிகிச்சை எடுத்து கொள்வார்களா என சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் வேளையில் தற்போது ஒரு செய்தி வெளியாகியுள்ளது.
விஜய் டிவி ‘ராஜா ராணி 2’ சீரியலில் இனி 2 சந்தியாவா? குழப்பத்தில் ரசிகர்கள்!
அதாவது கடந்த சில மாதங்களுக்கு முன்பு கண்ணனுக்கு ஜோடியாக தீபிகா நடித்து வந்தார். இவர்களின் ஜோடி மக்களுக்கு மிகவும் பிடித்துவிட்டது. தீபிகா முகப் பருவின் காரணமாக சீரியலை விட்டு விலகினார். இவருக்கு பதிலாக சாய் காயத்ரி கண்ணனுக்கு ஜோடியாக நடித்து வந்தார். கண்ணன் மற்றும் தீபிகா இருவரின் ஜோடி அளவுக்கு கண்ணன்- சாய் காயத்ரியின் ஜோடி இல்லையென ரசிகர்கள் பலரும் கூறினர். தீபிகாவையே மீண்டும் அறிமுகப்படுத்தும்படி கேட்டுக் கொண்டனர். ஆனால் நாளடைவில் சாய் காயத்ரியையும் ஐஸ்வர்யாவாக ரசிகர்கள் ஏற்றுக்கொள்ள ஆரம்பித்துவிட்டனர்.
சீரியலில் இருந்து விலகிய பிறகும் கூட கண்ணன் மற்றும் தீபிகா இருவரும் சிறந்த நண்பர்களாகவே இருந்து வந்தனர். அடிக்கடி இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் ஒன்றாக ரீல்ஸ் செய்து பதிவிட்டபடி இருந்தனர். தீபிகா அவரது முகப் பருவிற்கும் சிகிச்சை எடுத்துவந்தார். சிகிச்சைக்கு பிறகு நாளுக்கு நாள் தீபிகாவின் முகம் சரியாகிக்கொண்டே வந்தது. ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி மீண்டும் தீபிகா கண்ணனுக்கு ஜோடியாக பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் இணையப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.