விஜய் டிவி ‘ராஜா ராணி 2’ சீரியலில் அடுத்து வரப்போகும் ட்விஸ்ட் – சந்தியாவை மாட்டிவிட்ட அர்ச்சனா!
விஜய் டிவி “ராஜா ராணி 2” சீரியலில் பார்வதி மற்றும் சக்கரை உடம்பில் இருந்த வெடிகுண்டுகளை கண்டுபிடித்து சந்தியா தென்காசிக்கு பெரிய நல்லது செய்து இருக்கின்றார். அதனால் சந்தியாவை போலீஸ் உடையில் சித்தரித்து ஊர் முழுவதும் கட் அவுட் வைத்திருக்கின்றனர். அது குறித்த ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
ராஜா ராணி 2 ப்ரோமோ:
ராஜா ராணி 2 சீரியலில், தீவிரவாதியான செல்வம் பார்வதியை கடத்தி வைத்து மனித வெடிகுண்டாக மாற்ற நினைக்கிறார். பார்வதியை காணாமல் சரவணனும் சந்தியாவும் பல இடங்களில் தேடி அலைய அப்போது செல்வத்தின் பென்ட்ரைவ் கிடைக்கிறது. அதை சந்தியா போலீசிடம் ஒப்படைத்து விட அப்போது பார்வதிக்கும் திருவிழாவில் குண்டு வைப்பதற்கும் ஏதோ சம்மந்தம் இருப்பது தெரிய வருகிறது. அதனால் திருவிழாவில் பார்வதியை தேடி கண்டுபிடிக்கிறார் சந்தியா.
பார்வதி, செல்வம் தான் தீவிரவாதி என சொல்ல சரவணன் சந்தியா சேர்ந்து செல்வத்தை போலீசிடம் ஒப்படைகின்றனர். அப்போது சக்கரை உடம்பில் வெடிகுண்டு வைத்திருப்பதை தெரியாமல் அனைவரும் சந்தோசமாக இருக்க பின் சக்கரை உடம்பில் வெடிகுண்டு இருப்பத்தை சந்தியா கண்டுபிடிக்கிறார். போலீஸ் அனைவரும் சந்தியாவின் இந்த தைரியமான செயலை பார்த்து புகழ்ந்து தள்ளுகின்றனர். மேலும் போலீஸ் அதிகாரி தன்னுடைய தொப்பியை கொடுத்து பாராட்டுகிறார்.
Exams Daily Mobile App Download
ஆனால் இதெல்லாம் சிவகாமிக்கு பிடிக்காமல் இருக்கிறது. இந்நிலையில் ஊர் முழுவதும் சந்தியாவை போலீஸ் உடையிலும், போலீஸ் தொப்பியை வைப்பது போலவும் போட்டோ எடுத்து கட் அவுட் வைக்கின்றனர். சிவகாமி மற்றும் குடும்பத்தில் அனைவரும் அதை பார்க்க ஊர் மக்கள் அனைவரும் சந்தியாவை காவல் தெய்வம் என சொல்லி சந்தோசப்படுகின்றனர். பின் சரவணன் தான் இப்படி எல்லாம் போட்டோ வைக்க சொன்னதாக அர்ச்சனா சிவகாமியிடம் மாட்டி விடுகிறார். இது குறித்த ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது.