சமையல் நிகழ்ச்சியில் பணத்தினை கொடுத்து உதவும் சரவணன், கேள்வி கேட்கும் ஜட்ஜ் – வெளியான ‘ராஜா ராணி 2’ ப்ரோமோ!!
விஜய் தொலைக்காட்சியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் ‘ராஜா ராணி 2’ சீரியலின் லேட்டஸ்ட் ப்ரோமோ ஒன்று தற்போது வெளியாகி உள்ளது. அது குறித்து இந்த பதிவில் காணலாம்.
‘ராஜா ராணி 2’ சீரியல்
ஹிந்தி சீரியலான ‘என் கணவன் என் தோழன்’ சீரியலின் தமிழ் ரீமேக் தான் ‘ராஜா ராணி 2’ சீரியல். இந்த சீரியலில் ஐபிஎஸ் அதிகாரியாக வேண்டும் என்ற கனவோடு இருக்கும் கதாநாயகி சந்தியா சில சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக திருமணம் செய்து கொள்கிறார். ஆனால், அவரது கணவர் சரவணன் அவரை அனைத்து விதங்களிலும் ஊக்குவிக்கிறார். இதனால் இருவருமே பல பிரச்சனைகளை குடும்பத்தில் சந்திக்கின்றனர். தற்போது இந்த சீரியலில் முக்கிய கட்டமாக சரவணன் ஒரு சமையல் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சந்தியாவுடன் சென்னை செல்கிறார்.
விஜய் டிவியில் ப்ரஜன் & சரண்யா நடிப்பில் உருவாகும் ‘வைதேகி காத்திருந்தாள்’ சீரியல் – ரசிகர்கள் குஷி!
சரவணன் எக்காரணத்தை கொண்டும் கவலை அடைந்து விட கூடாது என்று அவரது அம்மா சிவகாமி சந்தியாவிடம் தனிப்பட்ட முறையில் கூறுகிறார். சரவணன் மனம் புண்படாமல் தான் பார்த்துக் கொள்வதாக சிவகாமிக்கு சந்தியா சத்தியம் செய்து தருகிறார். தற்போது இது குறித்த ப்ரோமோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில் சமையல் நிகழ்ச்சியில் சரவணனுக்கு பணம் கொடுத்து அதனை வைத்து விருப்பப்படி சமையல் பொருட்கள் வாங்கி சமையல் செய்ய வேண்டும் என்று கூறுகின்றனர்.
ஜெனிக்கு ஆறுதல் சொன்ன பாக்கியா, கோபியை சந்திக்க ராதிகாவின் அம்மா – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!
சரவணனும் தனக்குரிய பணத்தினை பெற்று கொண்டு பொருள் வாங்க போகிறார். அப்போது அவரிடம் ஒருவர் வந்து சாப்பிட்டு பல நாட்களாகிறது என்று பணம் வேண்டும் என்று கேட்கிறார். அவரிடம் சரவணன் பணத்தினை கொடுத்து விட்டு குறைந்த பொருட்கள் மட்டுமே வாங்கி கொண்டு வருகிறார். சரவணன் வாங்கி இருக்கும் பொருட்களை பார்த்து விட்டு சந்தியா குழப்பம் அடைகிறார். பின்னர், தன்னிடம் உள்ள பொருட்களை வைத்து அவர் சமையல் செய்கிறார். அப்போது அவரது உணவினை சாப்பிட வரும் ஜட்ஜ் இது சமையல் போட்டி என்றும் இது மனிதாபிமான போட்டி கிடையாது என்றும் கூறுகிறார். இதனால் சந்தியா மற்றும் சரவணன் இருவரும் வருத்தம் அடைகின்றனர். இத்துடன் ப்ரோமோ முடிவடைந்து விடுகிறது.