விஜய் டிவியில் ப்ரஜன் & சரண்யா நடிப்பில் உருவாகும் ‘வைதேகி காத்திருந்தாள்’ சீரியல் – ரசிகர்கள் குஷி!
விஜய் டிவியில் நடிகர் ப்ரஜன் மற்றும் நடிகை சரண்யா நடிப்பில் புதிய சீரியல் ஒன்று உருவாக்கப்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ள நிலையில் அந்த சீரியலுக்கு ‘வைதேகி காத்திருந்தாள்’ என்று பெயரிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
புதிய சீரியல்
விஜய் டிவியில் கடந்த சில மாதங்களாக புத்தம் புதிய சீரியல்கள் ஆக்கிரமித்து வருகிறது. வழக்கமாக 2 அல்லது 3 ஆண்டுகள் வரை ஒளிபரப்பாகும் சீரியல்கள் அதற்கு பின்பு முடிவுக்கு வருவது உண்டு. இந்நிலையில் சமீபத்தில் விஜய் தொலைக்காட்சியில் ‘தென்றல் வந்து என்னை தொடும்’ என்ற சீரியல் அறிமுகம் செய்யப்பட்டு தற்போது ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது. இதையடுத்து ‘முத்தழகு’ என்ற புதிய சீரியல் ஒன்று விரைவில் வெளியாக இருக்கிறது.
விவசாய பின்னணி கொண்ட கதைக்களத்துடன் வெளியாகி இருக்கும் ‘முத்தழகு’ சீரியலின் ப்ரோமோ ரசிகர்களின் கவனம் ஈர்த்து வருகிறது. இதை தொடர்ந்து விஜய் டிவியில் புத்தம் புதிய சீரியல் ஒன்று ஒளிபரப்பாக இருக்கிறது. விஜய் டிவியின் பிரபல சீரியலான ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தொடரின் இயக்குனர் சிவசேகர் அவர்களின் இயக்கத்தில் உருவாக்கப்பட்டு வரும் இந்த தொடரில் நடிகர் ப்ரஜன் மற்றும் சரண்யா துராடி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.
ஜெனிக்கு ஆறுதல் சொன்ன பாக்கியா, கோபியை சந்திக்க ராதிகாவின் அம்மா – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!
இவர்களுடன் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ நடிகை ஷீலா, சரண்யாவின் அம்மா கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். இப்போது இந்த சீரியல் குறித்து வெளிவந்திருக்கும் புதிய தகவல் என்னவென்றால் இதற்கு ‘வைதேகி காத்திருந்தாள்’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது. மேலும் ப்ரஜன் மற்றும் சரண்யா நடிப்பில் உருவாகும் இந்த சீரியல் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலை போல குடும்ப பின்னணி கொண்டதாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.