2வது மகனுக்காக ஆல்யா மானசா செய்த தியாகம் – சீரியலில் இருந்து விலகல்! ரசிகர்கள் ஷாக்!
சின்னத்திரை நடிகர்களுக்கு சினிமா நடிகர்களை போல மவுசு அதிகமாக இருக்கும் நிலையில், தன்னுடைய மகனிற்கான முன்னணி சீரியலில் இருந்து நடிகை ஆலியா மானசா விலகி இருக்கிறார். ஆனாலும் அவர் புதிய சீரியலில் என்ட்ரி கொடுப்பேன் என விளக்கம் கொடுத்து இருக்கிறார்.
நடிகை ஆலியா:
விஜய் டிவி சீரியல்களில் புதுமையான கன்டென்ட் குறையாமல் இருக்கும் என்பதால் பலர் சீரியலை விரும்பி பார்க்கின்றனர். அந்த வகையில் விஜய் டிவியில் இரவு 9:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் ராஜா ராணி 2. இந்த சீரியலில் சரவணன் கதாபாத்திரத்தில் நடிகர் சித்து நடித்து வந்தார். அவருக்கு ஜோடியாக சந்தியாவாக நடிகை ஆலியா மானசா நடித்து வந்தார். சீரியலில் போலீஸ் அதிகாரி ஆக வேண்டும் என்ற கனவுடன் அவர் இருப்பதால் சந்தியா கதாபாத்திரம் தைரியமான பெண்ணாக காட்டப்படும்.
‘பாக்கியலட்சுமி’ சீரியலில் அடுத்த ட்விஸ்டு – கோபி, ராதிகாவுடன் பழகுவதை கண்டுபிடிக்கும் எழில்?
ஆனால் ஆலியா இரண்டாவது முறை கர்ப்பமாக இருப்பதால் சீரியலில் இருந்து விலகி இருக்கிறார். முன்னணி சீரியலில் கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பை தனது குழந்தைக்காக ஆலியா விட்டிருக்கிறார். அவருக்கு பதிலாக தற்போது ரியா என்பவர் நடித்து வருகிறார். இந்நிலையில் ஆலியாவிற்கு சில நாட்களுக்கு முன் ஆண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தைக்கு அர்ஷ் என பெயர் வைத்து ஆலியா சஞ்சீவ் ஜோடி சந்தோசப்பட்டனர்.
விஜய் டிவி ஆலியா மற்றும் சஞ்சீவ் ஜோடியின் 2வது குழந்தையின் முதல் புகைப்படம் – வியக்கும் ரசிகர்கள்!
மேலும் அவர் பிரசவத்திற்கு பின் ராஜா ராணி 2 சீரியலில் என்ட்ரி கொடுப்பார் என சமூக வலைத்தளங்களில் செய்தி பரவியது. அது பற்றி ஆலியா விளக்கம் கொடுத்து இருக்கிறார். அதில் அவர் ராஜா ராணி 2 சீரியலில் ரீ என்ட்ரி கொடுக்கமாட்டேன் எனவும், ஆனால் பிரசவத்திற்கு பின் புதிய சீரியலில் என்ட்ரி கொடுப்பேன் என சொல்லி இருக்கிறார். அதனால் ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கின்றனர். மேலும் அவர் இன்னும் சில மாதங்களில் புதிய சீரியலில் வர இருப்பதாக தெரிகிறது.