பஸ் விபத்தில் சிக்கும் சந்தியா & சரவணன், மீண்டும் சேர்த்து வைத்த பயணம் – ராஜா ராணி 2 ப்ரோமோ!
விஜய் டிவி “ராஜா ராணி 2” சீரியலில், சந்தியாவை பிரிய சரவணன் அவரை பேருந்தில் ஏற்றி விடுகிறார். அந்த பேருந்து விபத்தில் சிக்கி விடுகிறது. சந்தியாவிற்கு ஏதாவது ஆனதா என அழுது கொண்டே சரவணன் கத்துகிறார். அது குறித்த பரபரப்பு ப்ரோமோ ஒன்று தற்போது வெளியாகி உள்ளது.
ராஜா ராணி 2:
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ராஜா ராணி 2 சீரியலில் சந்தியா தான் பார்வதி கல்யாணம் தள்ளி போக காரணம் என சிவகாமி ஆரம்பிக்க, சரவணன் இது தான் நல்ல சமயம் என நினைத்து சந்தியாவை வீட்டை விட்டு வெளியே அனுப்புகிறார். குடும்பத்தில் இருப்பவர்கள் எவ்வளவோ தடுத்தும் சரவணன் கேட்பதாக இல்லை. இது குடும்பத்திற்காக இல்லை, சந்தியாவின் எதிர்காலம் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக தான் இந்த முடிவு என சரவணன் பிடிவாதமாக இருக்கிறார்.
சந்தியாவை ஆட்டோவில் ஏற்றி பஸ் ஸ்டாப்பிற்கு அழைத்து செல்கிறார். அங்கே பஸ் வர நேரமாகிறது. சந்தியா தனது மனதில் இருப்பதை சொல்கிறார். ஆனாலும் சரவணன் கேட்காமல் சந்தியாவை பஸ்சில் ஏற்றி விடுகிறார். பின்னர் பஸ் கிளம்ப பிரிய மனமில்லாமல் இருக்கிறார். பஸ் பின்னால் ஓடி சென்று ஏறி விடுகிறார். அது சந்தியாவிற்கு தெரியாது. இந்நிலையில் தற்போது புதிய ப்ரோமோ ஒன்று வெளியாகி உள்ளது.
அதில் சந்தியா செல்லும் பஸ் மீது பின்னால் வரும் லாரி மோதி விடுகிறது. அதில் நிறைய பேர் அடிபட்டு இருக்கின்றனர். அங்கே ஆம்புலன்ஸ் வருகிறது. சரவணன் சந்தியாவிற்கு என்ன நடந்திருக்கும் என தெரியாமல் பயத்தில் சந்தியாவை தேடி அலைந்துவிட்டு சந்தியா என அழுது கொண்டே கூப்பிடுகிறார். அப்போது சந்தியா ஒரு சின்ன பையனை தூக்கிக் கொண்டு காப்பாத்துங்க என அழுகிறார். பின்னர் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு ஓடி வந்து கட்டி அணைத்து கொள்கின்றனர். இவ்வாறு ப்ரோமோ ஒன்று வெளியாகி உள்ளது.