சந்தியாவை பிரிய மனமில்லாமல் இருக்கும் சரவணன், செந்தில் காலில் விழுந்து மன்னிப்பு கேட்கும் அர்ச்சனா – இன்றைய “ராஜா ராணி 2” எபிசோட்!!
விஜய் டிவி “ராஜா ராணி 2” சீரியலில், சந்தியாவை பஸ்சில் ஏற்றிவிட்டு போக மனமில்லாமல் இருக்கும் சரவணன், பின்னால் ஓடி வருகிறார். பின் அர்ச்சனா தான் செய்தது தவறு தான் என நினைத்து செந்தில் காலில் விழுந்து மன்னிப்பு கேட்கிறார்.
ராஜா ராணி 2:
இன்று “ராஜா ராணி 2” சீரியலில், சந்தியாவை பிரிய முடிவு செய்த சரவணன் அவரை பஸ்சில் ஏற்றி விடுகிறார். இருவரும் பிரிய போகிறோம் என்ற வருத்தத்தில் கண்ணீர் வடிக்கின்றனர். சந்தியா அழுது கொண்டே சென்று ஜன்னல் ஓரத்தில் அமர, சரவணன் போய்விட்டு வாருங்கள் என சொல்ல மனமில்லை என அழுது கொண்டே சொல்கிறார். சந்தியா அழுது கொண்டே சரவணனின் கையை பிடிக்க சரவணன் கையை எடுத்துக் கொண்டு அங்கிருந்து கிளம்புகிறார்.
பின்னால் வண்டி செல்ல சரவணன் சந்தியாவை பிரிய முடியாமல் அழுது கொண்டே வருகிறார். சந்தியாவும் அழுக, சரவணன் ஓடி வந்து பஸ்சில் ஏறுகிறார். சந்தியாவிற்கு அது தெரியாமல் அழுது கொண்டு வர, சந்தியா டிக்கெட் வாங்க நடத்துனரிடம் 100 ரூபாய் கொடுக்கிறார். சரவணனிடம் டிக்கெட் வாங்க வர சரவணன் அவர் கொடுத்த 100 ருபாய் வேண்டும் என கேட்கிறார். உடனே நடத்துனர் அதை சரவணனிடம் கொடுத்து விடுகிறார்.
வீட்டில் இப்படி நடந்து விட்டது என அனைவரும் சோகத்தில் இருக்க நீ தான் எல்லாவற்றிற்கும் காரணம் என சரவணனின் அப்பா சொல்கிறார். ஆதியும், சந்தியா அதற்காக பார்வதி வாழ்க்கையை இப்படி செய்தததற்கு ஆதாரம் எதுவும் இல்லை அப்பறம் எப்படி நம்ப முடியும் என கேட்கிறார். வீட்டில் நடக்கும் எல்லா பிரச்சனைக்கும் இந்த ஆதாரம் கேட்பது தான் காரணம் என சரவணன் அப்பா திட்டுகிறார். அப்போது அங்கே பக்கத்து வீட்டில் இருக்கும் கவிதா வருகிறார்.
சிவகாமியை அழைத்து வீட்டில் என்னென்னமோ நடந்ததாம் என கேட்கிறார். சந்தியா இந்த வீட்டிற்காக என்னவெல்லாம் செய்திருப்பார். ஆனால் இப்படி அவளை வெளியே அனுப்ப எப்படி மனம் வந்தது என கேட்கிறார். சந்தியா வெளியே சென்றாலும் அவள் இந்த வீட்டு மருமகள் தான் என சிவகாமி சொல்கிறார். சமையல் போட்டியில் கூட சந்தியாவிற்கு சரவணன் எவ்வளவு ஆதரவாக இருந்திருக்கிறார். ஆனால் சந்தியாவை வெளியே அனுப்ப சரவணனுக்கு எப்படி மனம் வந்தது என கேட்கிறார்.
சீக்கரம் சந்தியாவை வீட்டிற்கு வர வைக்க என்ன வழி அதை செய்யுங்கள் என சொல்லிவிட்டு கிளம்புகிறார். பின்னர் அர்ச்சனா செந்திலும் ரூமிற்கு வந்துள்ளனர். அர்ச்சனாவை மீண்டும் செந்தில் வெறுக்க அர்ச்சனா செந்தில் காலில் விழுந்து அழுகிறார். இனிமேல் இது போல எந்த தப்பும் செய்ய மாட்டேன் என காலில் விழுந்து கெஞ்சி அழுகிறார். உடனே செந்தில் அவரை மன்னித்து ஏற்றுக் கொள்கிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.