ரயில் நிலைய நடைமேடை டிக்கெட் விலை ரூ.10 ஆக குறைப்பு? தெற்கு ரயில்வே விளக்கம்!
கொரோனா ஊரடங்கு காரணமாக விரைவு ரயில்களுக்கு முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டுகள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், மீண்டும் முன்பதிவில்லா டிக்கெட்டுகள் வழங்கப்படும் என்று தெற்கு ரயில்வே பொது மேலாளர் அறிவித்துள்ளார்.
விரைவு ரயில்கள்:
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றின் 2ம் அலை கடந்த மார்ச் மாதம் முதல் பரவி வருகிறது. கொரோனா தொற்று பாதிப்பின் முதல் அலை கடந்த ஆண்டு தொடங்கியிருந்த நிலையில், தீவிர ஊரடங்கு கட்டுப்பாடுகளின் விளைவினால் பாதிப்பு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. தற்போது 2ம் அலையின் பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. ஆனால் ஊரடங்கு காலத்தின் தொடக்கத்தில் அரசு பல்வேறு கட்டுப்பாடுகளையும் அமல்படுத்தியது.
நவ.1 முதல் பள்ளிகள் திறப்பு, மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு தடை – அரசு அறிவிப்பு!
இதனால் மக்கள் வீடுகளிலேயே இருக்க அறிவுறுத்தப்பட்டனர். மக்கள் வெளியில் செல்லும் போது முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மக்கள் ஓரிடத்தில் ஒரே நேரத்தில் கூடுவதற்கு முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து சேவைகள் முற்றிலும் முடக்கப்பட்டது. மிகவும் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே குறிப்பிட்ட அளவிற்கு மட்டும் குறைந்த எண்ணிக்கையிலான ரயில்கள் இயக்கப்படுகிறது. அதிலும், விரைவு மற்றும் அதிவிரைவு ரயில்கள் மட்டுமே இயக்கப்படுகிறது.
வீட்டில் இருந்தபடியே ரூ.50,000 கடன் பெறலாம் – SBI இ-முத்ரா திட்டம்!
பொதுவாக இந்த ரயில்களில் குறிப்பிட்ட அளவிலான எண்ணிக்கையில் பெட்டிகள் முன்பதிவில்லாத பயணிகள் பயணிக்க ஒதுக்கப்படும். தற்போது கொரோனா காலத்தில் முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டுகள் மட்டுமே வழங்கப்படுகிறது. தற்போது தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஜான் தாமஸ் செய்தியாளர்களை சந்தித்துள்ளார். அப்போது, விரைவு, அதிவிரைவு ரயில்களுக்கு முன்பதிவில்லாத டிக்கெட்கள் ஓரிரு மாதங்களில் மீண்டும் வழங்கப்படும் என்றும், கொரோனா தொற்று குறைந்ததும் நடைமேடை டிக்கெட் ரூ.50லிருந்து மீண்டும் ரூ.10ஆக மாற்றப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.