நவ.1 முதல் பள்ளிகள் திறப்பு, மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு தடை – அரசு அறிவிப்பு!

0
நவ.1 முதல் பள்ளிகள் திறப்பு, மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு தடை - அரசு அறிவிப்பு!
நவ.1 முதல் பள்ளிகள் திறப்பு, மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு தடை - அரசு அறிவிப்பு!
நவ.1 முதல் பள்ளிகள் திறப்பு, மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு தடை – அரசு அறிவிப்பு!

கேரளா மாநிலம் முழுவதும் தற்போது கொரோனா நோய்த்தொற்று சூழல் குறைந்திருக்க கூடிய சூழலில் நவம்பர் 1ம் தேதி முதல் பள்ளிகள் மீண்டுமாக திறக்கப்பட இருக்கிறது. ஆனால் மாற்றுத் திறனாளி மாணவர்கள் நேரடி வகுப்புகளில் கலந்து கொள்ள அனுமதி கொடுக்கப்படவில்லை.

பள்ளிகள் திறப்பு

கொரோனாவின் கோரத்தாண்டவத்தில் இருந்து படிப்படியாக மீண்டு வரும் தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில் வரும் நவம்பர் 1ம் தேதி முதல் பள்ளிகள் மீண்டுமாக திறக்கப்பட இருக்கிறது. அதற்கான ஆரம்ப பணிகளை மேற்கொண்டு வரும் அரசாங்கம், மாற்றுத் திறனாளி மாணவர்கள் நேரடி வகுப்புகளில் கலந்து கொள்வதற்கு தடை விதித்துள்ளது. அதாவது, பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுவதின் முதல் கட்டமாக சிறப்புத் தேவைகள் உள்ள குழந்தைகள் பள்ளிக்கு வரத்தேவையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி – அதிகாரிகள் ஆய்வு!

இது தவிர, மற்ற சிறிய வகுப்புகளை சேர்ந்த குழந்தைகளும் நேரடி வகுப்புகளில் கலந்து கொள்வது கட்டாயமில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் கேரளாவில் பள்ளிகளை திறக்கும்போது பின்பற்ற வேண்டிய சில வழிகாட்டுதல்கள் நெறிமுறைகளை அரசு அறிவித்துள்ளது. அதன் கீழ், பள்ளிகள் முழு திறனில் செயல்பட வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. வளாகத்தில் உள்ள மாணவர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த ஒவ்வொரு வகுப்பு மாணவர்களும் தொகுதிகளாக பிரிக்கப்பட உள்ளனர். கூட்ட நெரிசலைத் தவிர்ப்பதற்காக ஒவ்வொரு வகுப்பிற்கும், வகுப்பு நேரங்களும் இடைவெளிகளும் வித்தியாசமாக இருக்கும்.

TNPSC குரூப் 4 VAO தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு – தேர்வாணையம் வெளியீடு!

குழந்தைகளின் எண்ணிக்கை குறைவாக உள்ள பள்ளிகளில் ஒரே தொகுதியில் வகுப்புகள் நடத்த அனுமதிக்கப்படும். மேலும் முதல் கட்டமாக பள்ளிகளில், வகுப்புகள் காலையில் மட்டுமே நடைபெறும். அனைத்து ஆசிரியர்களும், ஊழியர்களும் கட்டாயமாக இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசி போடுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். பள்ளிகளுக்கு வர முடியாத மாணவர்களுக்காக ஆன்லைன் வகுப்புகள் தொடரும். பள்ளிகளில் நோய் தொற்று அறிகுறி குறித்து கண்காணிக்க ஒரு பதிவு அமைக்கப்பட்டிருக்கும். அதே போல நோய்வாய்ப்பட்ட நபர்களுக்காக சிறப்பு அறைகளும் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!