வீட்டில் இருந்தபடியே ரூ.50,000 கடன் பெறலாம் – SBI இ-முத்ரா திட்டம்!
தொழில் முனைவோர்களுக்கு ஆன்லைன் மூலம் ரூ .50,000 கடன் பெறும் வசதியை எஸ்பிஐ இ-முத்ரா கடன் திட்டம் வழங்கி வருகிறது. இது குறித்த விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
இ-முத்ரா கடன்:
நாடு முழுவதும் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து வரும் நிலையில் பெரும்பாலோனோர் தொழில் தொடங்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். பல வங்கிகள் மற்றும் பல்வேறு நலத்திட்டங்கள் தொழில் தொடங்குபவர்களுக்கு கடன் வழங்க தயாராக இருந்து வருகிறது. இந்நிலையில் எஸ்பிஐ வங்கியில் புதிதாக தொழில் தொடங்குபவர்களுக்கு கடன் வழங்கப்படுகிறது. இந்த கடனானது இ-முத்ரா திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டு வருகிறது.
TNPSC குரூப் 4 VAO தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு – தேர்வாணையம் வெளியீடு!
இந்த திட்டத்தின் கீழ் எஸ்.பி.ஐ., சிறு வணிகங்களுக்கு வெறும் 3 நிமிடங்களில் ரூ.50,000 வரை கடன் வழங்கி வருகிறது. எஸ்பிஐ-யின் இ-முத்ரா கடன் பெற ஒரு சிறிய தொழில் முனைவோராக இருப்பது கட்டாயம். மேலும் எஸ்பிஐ வங்கியில் குறைந்தது 6 மாத கால நடப்பு அல்லது சேமிப்புக் கணக்கு வைத்திருப்பவர்களால் மட்டுமே கடனை பெற முடியும். இந்த திட்டத்தின் கீழ் 1 லட்சம் ரூபாய் வரை கடன் பெற முடியும். ரூ.50,000 வரை வீட்டில் இருந்த படியே பெற்றுக்கொள்ள முடியும்.
அக்.6 முதல் 17ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை – தசரா பண்டிகை எதிரொலி!
கடன் பெறுபவர்கள் 5 ஆண்டிற்குள் செலுத்த வேண்டும் என்னும் நிபந்தனையின் கீழ் கடன் வழங்கப்படுகிறது. 50,000 ரூபாய்க்கு அதிகமாக கடன் பெற விரும்புபவர்கள் சேமிப்பு அல்லது நடப்பு கணக்கு எண் மற்றும் வங்கி கிளை விவரங்களை கொண்டு செல்ல வேண்டும். மேலும் வணிக சான்று, UIDAI – ஆதார் எண், சாதி விவரம், ஜிஎஸ்டிஎன் மற்றும் உத்யோக் ஆதார் போன்ற பதிவேற்றத்திற்கான பிற விவரங்கள், கடை மற்றும் நிறுவனம் அல்லது பிற வணிக பதிவு ஆவணங்கள் முதலியனவற்றை காண்பிக்க வேண்டும். இது போன்று வங்கியின் விதிமுறைகளை ஏற்கும் பட்சத்தில் கடன் வழங்கப்படும்.