பல்லவன், சேது விரைவு ரயில்கள் இன்று முதல் இயக்கம் – தெற்கு ரயில்வே அறிவிப்பு!!
கொரோனா ஊரடங்கு காரணமாக பயணிகள் வருகை இல்லாததால் பல்லவன், சேது விரைவு ரயில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது. தற்போது இன்று (ஜூன் 1) முதல் மீண்டும் இயக்கப்பட உள்ளது.
பல்லவன், சேது விரைவு ரயில்:
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. இதன் காரணமாக அரசு நோய் தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தமிழக சுகாதாரத்துறை பல்வேறு அறிவுரைகளை அரசுக்கு வழங்கி வருகிறது. ஊரடங்கை அமல்படுத்தி மக்கள் நடமாட்டத்தை குறைக்க சுகாதாரத்துறை வலியுறுத்தி வருகிறது. இதன் படி தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் மே 10 முதல் மாநிலம் முழுவதும் 14 நாட்களுக்கு முழு ஊரடங்கை அறிவித்தார். மே 24ம் தேதி வரை இந்த ஊரடங்கு அமலில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
சென்னை மெட்ரோ ரயில் சேவை தடை நீட்டிப்பு – ரயில்வே அறிவிப்பு!!
மேலும் இந்த ஊரடங்கு மே 31 வரை நீட்டிக்கப்பட்டது. ஊரடங்கு காலத்தில் கடைகள், அலுவலகங்கள் போன்றவற்றிற்கு அரசு தடை விதித்துள்ளது. மக்கள் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு செல்வதை தடுக்க அரசு போக்குவரத்து சேவைகளை ரத்து செய்துள்ளது. மக்கள் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வதை தடுத்து இதன் மூலம் நோய் பரவலை தடுக்க முயற்சித்து வருகின்றது. ரயில் சேவைகளும் நிறுத்தப்பட்டு வருகிறது. பொது மக்களின் வருகை இல்லாததால் குறிப்பிட்ட ரயில்கள் மட்டும் இயக்கப்பட்டு வருகிறது.
TN Job “FB Group” Join Now
சென்னை, சேது விரைவு ரயில் தளர்வில்லா முழு முடக்கம் காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. தற்போது மீண்டும் இயக்கப்படவுள்ளது. ஜூன் 1ம் தேதியான இன்று சென்னை, சேது பயணிகள் விரைவு ரயில் சேவை தொடங்குகிறது. திருச்சி – ராமேஸ்வரம் ரயிலும் இயங்கும். சென்னை – காரைக்குடி அதிவிரைவு மாலை 3.45 க்கு சென்னை எழும்பூரில் இருந்து புறப்பட்டு இரவு காரைக்குடி வந்து சேரும். ராமேஸ்வரம் – சேது விரைவு ரயில் ராமேஸ்வரத்திலிருந்து புறப்பட்டு சென்னை செல்லும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.