சென்னை மெட்ரோ ரயில் சேவை தடை நீட்டிப்பு – ரயில்வே அறிவிப்பு!!
தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்றின் வீரியம் காரணமாக தளர்வுகளற்ற முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து சென்னையில் இயங்கி வரும் மெட்ரோ ரயில் சேவைக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மெட்ரோ ரயில்:
தமிழகத்தில் கடந்த மே மாதம் 10ம் தேதி முதல் கொரோனாவின் இரண்டாவது அலையில் இருந்து மக்களை பாதுகாக்கும் வகையில் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது. ஊரடங்கின் தொடக்கத்தில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டது. இதன் எதிரொலியாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்க தொடங்கியது. இதன் காரணமாக தமிழகத்தில் கடந்த 24ம் தேதி முதல் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
தமிழகத்தில் மீண்டும் பள்ளிகள் திறப்பு – ஜூன் 7க்கு பிறகு அறிவிப்பு!
இதன் காரணமாக பொதுப்போக்குவரத்திற்கும் தடை விதிகப்பட்டது. இதனால் சென்னை மெட்ரோ ரயில் சேவையும் இயங்க தடைவிதிக்கப்பட்டது. அதன்படி சென்னை மெட்ரோ ரயில் சேவை மே மாதம் 31ம் தேதி வரை இயங்காது என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோன பரவல் இன்னும் கட்டுக்குள் வராத காரணத்தினால் தமிழக அரசு தளர்வுகளற்ற ஊரடங்கு கட்டுப்பாடுகளை வருகின்ற ஜூன் மாதம் 7ம் தேதி வரை நீட்டித்து அறிக்கை வெளியிட்டது.
TN Job “FB Group” Join Now
தற்போது இதனை தொடர்ந்து சென்னை மெட்ரோ ரயில் சேவை தடையும் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி வருகின்ற ஜூன் மாதம் 7ம் தேதி வரை மெட்ரோ ரயில் இயங்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இயந்திரங்கள், சிக்னல் செயல்பாடு போன்றவற்றை முறையாக இயங்குகிறதா என்பது கண்காணிக்கப்படும் என்றும் இதற்காக தினசரி காலை மற்றும் மாலை பயணிகள் இன்றி மெட்ரோ ரயில் சோதனை வழக்கம் போல் தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
I am a old man.I have no source of income.my wife and I’m also in SOS condition…. When we get free from lockdown….