தமிழக மின்வாரியத்தில் 5300 காலிப்பணியிடங்கள் விண்ணப்ப பதிவு – மறுவாய்ப்பு அளிக்க கோரிக்கை!
தமிழகத்தின் மின்வாரியத்தின் உதவி பொறியாளர், இளநிலை உதவியாளர் போன்ற பணிகளுக்கு தேர்வு நடத்துவது குறித்தும், அத்தேர்வுக்கு விண்ணப்பிக்க மறு வாய்ப்பு அளிக்குமாறும் அரசுக்கு கோரிக்கை எழுந்துள்ளது.
மின்வாரிய பணிகள்:
தமிழகத்தில் மின்சார வாரியத்திற்கான பணியாளர்கள் மின்வாரியம் நடத்தும் தேர்வின் மூலம் நியமனம் செய்யப்படுகிறார்கள். கடந்த 2020ம் ஆண்டுக்கான மின்வாரியத்தின் காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு, அதற்கான விண்ணப்பங்கள் பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் பெறப்பப்பட்டது. அதன்படி, 600 உதவி பொறியாளர், 500 இளநிலை உதவியாளர் கணக்கு, 1,300 கணக்கீட்டாளர் பணியிடங்கள் 2020ம் ஆண்டுக்கான காலியிடங்கள் ஆகும்.
பல்லவன், சேது விரைவு ரயில்கள் இன்று முதல் இயக்கம் – தெற்கு ரயில்வே அறிவிப்பு!!
2021ம் ஆண்டு துவக்கத்தில் கள உதவியாளர் பணிக்கு 2,900 காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டது. இந்நிலையில் கொரோனா தொற்றின் தாக்கத்தின் காரணமாக இந்த பணிகளுக்கான தேர்வுகள் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
தொடர்ந்து தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்து ஆட்சி மாற்றமும் நடந்துள்ளது. இதனால் முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்த 5,300 பதவிகளுக்கு தேர்வுகள் நடத்தப்படுமா என்பது தற்போது கேள்விக்குறியாகியுள்ளது. அப்படி நடத்தப்பட்டால், முன்னதாக விண்ணப்பிக்காதவர்களுக்கு விண்ணப்பிக்க மறுவாய்ப்பு அளிக்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்துள்ளது.
Ok
8th ,ITI Carpentry, making,3year ITI
ITI Carpentry & making all carpenter andarstand work