பாக்கியாவிடம் கோபியை விட்டு தரச்சொல்லி கேட்கும் ராதிகாவின் அம்மா – புதிய திருப்பங்களுடன் வெளியான ப்ரோமோ !
கோபிக்கும் ராதிகாவிற்கும் தொடர்பு இருப்பதை பாக்கியா அறிந்து கொண்டு வீட்டை விட்டு வெளியேறுகிறார். இந்நிலையில் ராதிகாவை சந்திக்க செல்லும்போது ராதிகாவின் அம்மா பாக்கியாவிடம் கோபியை விட்டு தரச்சொல்லி கெஞ்சி கேட்கும் படியான ப்ரோமோ வெளியாகி உள்ளது.
புதிய திருப்பங்களுடன் வெளியான ப்ரோமோ:
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி தொடரில் கோபியின் உண்மையான முகம் தற்போது தான் குடும்பத்தினர் அனைவருக்கும் தெரிய வந்திருக்கிறது. இத்தனை நாட்களாக கோபி வேலை வேலை என்று பொய் சொல்லி தப்பித்துக் கொண்டே இருந்தார். ஆனால் தற்போது கோபி பொய் சொல்லி தப்பிக்கவே முடியாத அளவுக்கு பாக்கியாவிடம் மாட்டி விட்டார்.
பள்ளி மாணவர்களுக்கு ஜூலை 24-ஆம் தேதி வரை விடுமுறை – பள்ளிக்கல்வித்துறை திடீர் அறிவிப்பு!
அதாவது மருத்துவமனையில் கோபிக்கு ஆக்சிடென்ட் ஆகி இருந்தபோது ராதிகாவிடம் நீ இல்லாமல் என்னால் உயிரோடவே இருக்க முடியாது எனக் கூறிக் கொண்டிருந்த அனைத்தையுமே பாக்கியா கண் முன்னாடி பார்த்ததனால் கோபியை மொத்தமாகவே வெறுத்து விடுகிறார். இத்தனை நாட்களாக கோபி ராதிகாவை பார்க்க ஏன் பயந்தார் என்கிற அனைத்து கேள்விகளுக்கும் விடை கிடைத்துவிட்டது. ஆனாலும் கோபி மறுபடியும் பாக்கியாவிடம் ஏதேனும் சொல்லி தப்பித்து விடலாம் என்று நினைத்தார். ஆனால் இதற்குப் பிறகும் பாக்கியா ஏமாற தயாராக இல்லை. இத்தனை நாட்களாக பிடிக்காமல் உங்களது மனைவியாக உங்களுடனே வாழ்ந்து வந்தேன் ஆனால் தற்போது முதன்முறையாக உங்களுக்கு பிடித்த ஒன்றை செய்ய போகிறேன் என்று சொல்லி விட்டு வீட்டை விட்டு கிளம்புகிறார்.
இதற்குப்பிறகு பாக்கியா கோபியுடன் ராதிகாவை சேர்த்து வைக்கப் போகிறாரோ என நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில் நேராக ராதிகாவை சந்திக்க ராதிகாவின் வீட்டிற்கு செல்கிறார். அங்கு ராதிகாவின் அம்மா பாக்கியாவிடம் எனது மகளுக்காக கோபியை விட்டு தரும்படி கெஞ்சி கேட்கும்படியான ப்ரோமோ வெளியாகியுள்ளது.