மீண்டும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்துடன் சேர நினைக்கும் முல்லை – ப்ரோமோ ரிலீஸ்!
கதிர் ஹோட்டலில் வேலை பார்க்கும் விஷயத்தை முல்லையிடம் ஜீவா கூறிவிடுகிறார். இந்நிலையில் இவ்வளவு கஷ்டப்பட்டு வேலை பார்க்க வேண்டாம் என நினைத்து குடும்பத்தினருடன் முல்லை சேர நினைக்கும் படியான ப்ரோமோ வெளியாகியுள்ளது.
பாண்டியன் ஸ்டோர்ஸ்:
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் கதிரும் முல்லையும் எப்படி 5 லட்ச ரூபாய் கடனை அடைக்க போகிறார்கள் என சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. அதாவது முல்லையின் கருவுறுதல் சிகிச்சைக்காக செலவு செய்த ஐந்து லட்ச ரூபாய் கடனை அடைக்கும் வரைக்கும் வீட்டு வாசலை கூட மிதிக்க மாட்டேன் என சவால் விட்டு முல்லையை அழைத்துக்கொண்டு கதிர் தற்போது வேறு ஒரு வாடகை வீட்டிற்கு சென்றிருக்கிறார்.
குடும்பத்தினர்கள் எவ்வளவோ கதிரிடம் சொல்லிப் பார்த்தும் கதிர் தன்னுடைய முடிவில் உறுதியாக இருந்தார். பின்பு எப்படியோ கதிருக்கு வேலை கிடைத்துவிட்டது என முல்லையிடம் சொல்லிவிட்டு தற்போது ஒரு ஹோட்டலில் வேலை பார்த்து வருகிறார். ஆனால் இந்த விஷயம் முல்லைக்கு தெரிய வந்தால் கண்டிப்பாக ஹோட்டலுக்கு வேலைக்கு அனுப்ப மாட்டார் என்பதால் முல்லையிடம் சொல்லாமல் மறைத்து கொண்டு இருக்கிறார்.
இந்நிலையில் எதர்ச்சையாக கதிர் வேலைபார்க்கும் ஹோட்டலுக்கு ஜீவா வருகிறார். அப்போது ஹோட்டலில் வேலை பார்த்துக் கொண்டிருப்பதை பார்த்து விட்டு கதிரிடம் இது பற்றி பேசுகிறார். ஆனாலும் கடனை அடைப்பதற்காக கண்டிப்பாக இங்கு வேலை பார்த்தே தீர வேண்டும் என கதிர் கூறி விடுகிறார். இதனிடையே கதிரை எப்படியாவது வீட்டிற்கு கூட்டி செல்ல வேண்டும் என நினைத்து முல்லையிடம் சென்று அனைத்து உண்மைகளையும் கூறுகிறார். பின்பு இவ்வளவு கஷ்டப்பட்டு இங்கு வேலை பார்க்க வேண்டாம் என முல்லை குடும்பத்தினருடன் சேர நினைக்கும் படியான ப்ரோமோ வெளியாகியுள்ளது.