பாக்கியாவிடமும் கோபியை மாட்டிவிட நினைக்கும் ராதிகா – அதிரடி திருப்பங்களுடன் பாக்கியலட்சுமி!
பாக்கியா தான் தன்னுடைய மனைவி என்பதை கோபி ராதிகாவிடம் குடிபோதையில் உளறி விடுகிறார். ஆனால், குடிபோதையில் என்ன செய்தோம் என்பதே மறந்து மீண்டும் ராதிகா வீட்டிற்கு வரும்போது பாக்கியாவிடம் மாட்டி விடப் போகிறேன் என மிரட்டும்படியான ப்ரோமோ வெளியாகியுள்ளது.
பாக்கியலட்சுமி:
விஜய் தொலைக்காட்சியில் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி தொடரில் இத்தனை நாட்களாக கோபி, ராதிகா மற்றும் பாக்கியா இருவரையும் ஏமாற்றிக் கொண்டு இருந்தார். ஆனால், தற்போது கோபி கையும் களவுமாக பிடிபட்டுவிட்டார். மூர்த்தி கோபியை பற்றி கூறியதிலிருந்து கோபி மீது ராதிகாவிற்கு சந்தேகம் வருகிறது. கோபி எப்போது வீட்டிற்கு வந்தாலும் இப்போதே என்னை உங்களது வீட்டிற்கு என்னை அழைத்துச் செல்லுங்கள் என ராதிகா சண்டை போடுகிறார். இதனால் மனவேதனையில் கோபி நன்றாக குடித்துவிட்டு ராதிகாவின் வீட்டிற்கு வருகிறார்.
Exams Daily Mobile App Download
அப்போதும் ராதிகா கோபியிடம் உங்களது வீட்டிற்கு அழைத்துச் செல்லுங்கள் என கேட்க உடனடியாக கோபியும் ராதிகாவும் சேர்ந்து இருக்கும் புகைப்படத்தை எடுத்து ராதிகாவிடம் காட்டுகிறார். அந்தப் புகைப்படத்தைப் பார்த்ததும் ராதிகாவிற்கு தூக்கிவாரிப் போட்டு விட்டது. இத்தனை நாட்களாக கோபியும் என்னை ஏமாற்றி கொண்டிருந்தாரா என கதறி அழுகிறார். பின்பு போதை தெளிந்ததும் மீண்டும் ராதிகா வீட்டிற்கே கோபி வருகிறார்.
‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் இருந்து விலகிய ரோஷினியின் புதிய தோற்றம் – ரசிகர்கள் உற்சாகம்!
இரவு என்ன நடந்தது என்பதே கோபிக்கு சுத்தமாக ஞாபகமே இல்லை. ராதிகாவின் வீட்டிற்கு வந்ததுமே ராதிகா எதற்காக இங்கு வந்தீர்கள். எந்த மூஞ்சியை வைத்துக்கொண்டு திரும்பி வந்தீர்கள் என கண்டபடி பேசுகிறார். எதற்காக ராதிகா இப்படியெல்லாம் திட்ட வேண்டும் என கோபி யோசித்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் இன்னும் கொஞ்ச நேரம் இங்கேயே இருங்கள். பாக்கியா டீச்சரை இங்கு வரச் சொல்லி அனைத்து உண்மையையும் கூறி விடுகிறேன் என கோபியை ராதிகா மிரட்டும் படியான ப்ரோமோ வெளியாகியுள்ளது.