CRIS ரயில்வே மையத்தில் வேலை – நேர்காணல் மட்டுமே..!
ரயில்வே தகவல் அமைப்புகளுக்கான மையத்தில் (CRIS) சமீபத்தில் ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகியது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பில் Project Assistant பணிக்கு என்று காலிப்பணியிடங்கள் ஒதுக்கியுள்ளது. இப்பணி குறித்த அனைத்து தகவல்களும் இப்பதிவில் எளிமையாக வழங்கியுள்ளோம். இதன் மூலம் இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் இறுதி நாளான நாளைக்குள் விண்ணப்பித்து பயனடைய கேட்டுக் கொள்கிறோம்.
CRIS வேலைவாய்ப்பு விவரங்கள்:
- ரயில்வே தகவல் அமைப்புகளுக்கான மையம் (CRIS) வெளியிட்ட அறிவிப்பில், Project Assistant பணிக்கு என்று ஒரே ஒரு பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.
- இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் கட்டாயம் ஓய்வு பெற்ற மத்திய அரசின் ரயில்வே துறை அதிகாரியாக இருக்க வேண்டும்.
Exams Daily Mobile App Download
- மேலும் விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்ட பதவிகளில் குறைந்தது 5 ஆண்டுகள் வரை பணிபுரிந்த அனுபவம் வைத்திருக்க வேண்டும்.
- மத்திய அரசு பணிக்கு அளிக்கப்பட்டுள்ள வயது வரம்பு மற்றும் வயது தளர்வுகள் பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பில் காணலாம்.
- இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் பணியின் போது தகுதி மற்றும் அனுபவம் பொறுத்து மாத ஊதியம் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அரசு பணி உங்களது கனவா? – TNPSC Coaching Center Join Now
- இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் நேரடியாக நேர்முகத் தேர்வுகள் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
CRIS விண்ணப்பிக்கும் முறை:
CRIS ரயில்வே மையத்தின் பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் உடனே அதிகாரப்பூர்வ அறிவிப்பின் இறுதியில் உள்ள விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து சரியாக பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களையும் இணைத்து அறிவிப்பில் உள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும். மேலும் இப்பணிக்கு விண்ணப்பிக்க அளிக்கப்பட்ட கால அவகாசம் நாளையுடன் (03.06.2022) நிறைவு பெறுவதால் தகுதியானவர்கள் உடனே தங்களின் விண்ணப்பங்களை தயார் செய்து அனுப்பி பயனடையவும்.