மீனாவிடம் கோபியை திருமணம் செய்ய போவதாக சொன்ன ராதிகா – மகா சங்கமம் அடுத்து வருபவை!
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில் தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்துடன் மகா சங்கமம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தாத்தாவின் பிறந்தநாளுக்கு ராதிகா வர, தன்னை திருமணம் செய்ய இருப்பவர் பற்றி மீனாவிடம் ராதிகா சொல்கிறார். அதை கேட்டு மீனா அதிர்ச்சி அடைகிறார்.
பாக்கியலட்சுமி:
பாக்கியலட்சுமி சீரியல் தற்போது விறுவிறுப்பிற்கு பஞ்சம் இல்லாமல் பல திருப்பங்களுடன் சென்று கொண்டிருக்கிறது. கோபி பாக்கியாவை ஏமாற்றி ராதிகாவை திருமணம் செய்ய நினைக்க ராதிகா பாக்கியா இருவருக்கும் இந்த உண்மை தெரியாமல் இருக்கிறது. அதனால் பெரிய பிரச்சனை வர இருக்கிறது. இந்நிலையில் தாத்தாவின் பிறந்தநாளுக்கு சொந்தங்கள் அனைவரும் வர சொல்லலாம் என நினைக்கின்றனர். அப்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தை அழைக்க அனைவரும் முன்னதாகவே வருகின்றனர்.
Exams Daily Mobile App Download
அவர்களது வருகையை நினைத்து பாக்கியா ஈஸ்வரி தாத்தா என அனைவரும் சந்தோசமாக இருக்கின்றனர். இந்நிலையில் அன்றைய இரவு கோபி உடன் படுக்க கோபிக்கு இரவு போன் வருவதை பார்த்து மூர்த்திக்கு சந்தேகம் வருகிறது. அவர் இந்த நேரத்தில் யார் போன் செய்கிறார் என தெரியாமல் கேட்க கோபி அவரிடம் சமாளித்து பேசுகிறார். இப்படி கதை சென்று கொண்டிருக்க மறுபக்கம் முல்லை குழந்தை இல்லாததை மறந்து கொஞ்சம் சந்தோசமாக இருக்கிறார். அதை பார்த்து கதிர் சந்தோசப்படுகிறார்.
மேலும் தாத்தாவின் பிறந்தநாளுக்கு பாக்கியா ராதிகாவை வர சொல்லி இருக்கிறார். ஆனால் கோபிக்கு தெரிந்தால் வர விடமாட்டார் என்பதால் ராதிகா கோபிக்கு தெரியாமல் தாத்தாவின் பிறந்தநாளுக்கு செல்ல இருக்கிறார். அங்கே கோபியும் வர மீனாவிடம் ஜாலியாக பேசிய ராதிகா இவரை தான் திருமணம் செய்ய போகிறேன் என சொல்கிறார். அதை கேட்டு மீனா அதிர்ச்சி அடைகிறார். அவர் எல்லாரிடமும் உண்மையை சொல்வாரா ராதிகாவுக்கு உண்மை தெரிய வருமா என்பதை எல்லாம் இனி வரும் எபிசோடுகளில் பார்க்கலாம்.