“பாண்டியன் ஸ்டோர்ஸ்” & “பாக்கியலட்சுமி” மகா சங்கமம் நிகழ்ச்சியில் வரப்போகும் ட்விஸ்ட் – ரசிகர்கள் ஷாக்!
விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” மற்றும் “பாக்கியலட்சுமி” சீரியலில், இரு குடும்பங்களும் தாத்தாவின் பிறந்தநாளுக்காக ஒன்றாக சேர்ந்து இருக்கும் நிலையில், தற்போது அதில் பல விதமான கதைகள் கொண்டு செல்லப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மகா சங்கமம்:
விஜய் டிவியில் டாப் சீரியல்களில் ஒன்றான பாக்கியலட்சுமி மற்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ராமமூர்த்தி தாத்தாவிற்கு பிறந்தநாள் என்பதால் சொந்தங்களை அழைத்து அவருடைய பிறந்தநாளை கொண்டாட முடிவு செய்கின்றனர். அதனால் குன்னக்குடியில் இருந்து பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தினர் வந்திருக்கின்றனர். அது கோபிக்கு பிடிக்காமல் இருந்தாலும் அம்மா சொல்லிவிட்டார் என்பதால் கோபி வேறு வழி இல்லாமல் இருக்கிறார்.
Exams Daily Mobile App Download
இந்நிலையில் ஏற்கனவே ஒரு முறை மகா சங்கமம் நடைபெறும் போது பாக்கியா குடும்பம் பாண்டியன் ஸ்டோர்ஸ் வீட்டிற்கு சென்றார்கள். ஆனால் இந்த முறை அனைவரும் சென்னைக்கு வந்திருக்கின்றனர். இங்கே வந்து முல்லை மனம் மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜெனிக்கும் ஒரு முறை குழந்தை இல்லாமல் போனதால் முல்லையின் மனநிலை ஜெனிக்கு நன்றாக புரியும். அதனால் ஜெனி முல்லைக்கு ஆறுதல் சொல்ல அதனால் முல்லை சமாதானம் ஆவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மறுபக்கம் எழில் அமிர்தா திருமணத்தை பற்றி தெரிந்து கொண்டு தனம் ஆதரவாக இருக்க அவை எல்லாம் இனி வரும் எபிசோடுகளில் வர இருக்கிறது. அதுமட்டுமில்லாமல் தாத்தா சொந்தங்களை எல்லாம் பார்த்து சந்தோஷப்படுவார் எனவும் அதனால் அவரது உடல்நிலை சரியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி தாத்தாவிற்கு சரியானால் கோபியின் பாடு திண்டாட்டம் தான் என்பதால் இந்த மகா சங்கமத்தில் கன்டென்ட் குறையாமல் இருக்க போகிறது.