கோபியை திருமணம் செய்ய போவதாக சொன்ன ராதிகா – “பாக்கியலட்சுமி” சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில் கோபி ராதிகா வீட்டிற்கு வந்ததால் ராதிகா அவரை திட்டி வெளியே போக சொல்கிறார். அதை பார்த்த ராஜேஷ் சண்டை போட்டு மயூராவை ஒப்படைக்க சொல்லி போலீசில் புகார் கொடுக்கிறார். அதனால் போலீஸ் வீட்டிற்கு வர ராதிகா வேறு வழி இல்லாமல் கோபியை திருமணம் செய்ய இருப்பதாக சொல்கிறார்.
பாக்கியலட்சுமி:
பாக்கியலட்சுமி சீரியலில் கோபி பற்றிய உண்மை எல்லாம் ராதிகாவுக்கு தெரிந்த பின் ராதிகா கோபியை வீட்டிற்கு வர வேண்டாம் என சொல்கிறார். ஆனால் கோபி அதை கேட்காமல் அடிக்கடி வீட்டிற்கு வருகிறார். அதனால் ராதிகா கோபியை வெளியே தள்ளி சண்டை போடுகிறார். அப்போது அந்த வழியே சென்ற ராஜேஷ் அதை பார்த்துவிட்டு ராதிகாவை தரக் குறைவாக பேசுகிறார். அதனால் கோவப்பட்ட கோபி ராஜேஷை அடித்துவிடுகிறார். அதனால் ராஜேஷ் கோவப்பட்டு கண்டவனை விட்டு என்னை அடிக்க சொல்கிறாய் என சொல்லி சண்டை போடுகிறார்.
Exams Daily Mobile App Download
அதை நினைத்து ராதிகா பயங்கர கோவத்தில் இருக்கிறார். ராஜேஷ் ராதிகா மீது இருக்கும் கோவத்தில் போலீசிடம் புகார் அளிக்கிறார். அதில் என்னுடைய மனைவியும் நானும் விவாகரத்து வாங்கி பிரிந்து இருக்கிறோம். என் மகளை பார்க்கலாம் என கோர்ட் ஆர்டர் கொடுத்துள்ளது. ஆனால் என் மனைவி மகளை காட்டவில்லை. பதிலுக்கு யாரோ ஒருவர் வீட்டிற்கு வந்து செல்கிறார். இன்று ரோட்டில் அவருடன் என் மனைவி சண்டை போடுவதாக புகார் அளித்து இருக்கிறார்.
அதனால் ராதிகாவின் வீட்டிற்கு போலீஸ் வருகின்றனர். அப்போது ராதிகாவிடம் நீங்க உங்க பெண்ணை வேறு ஆளுடன் பழக விடுவதாக போலீசில் உங்க கணவர் புகார் கொடுத்திருப்பதாக சொல்கிறார். அப்போது ராதிகாவின் அம்மா அவரை தான் என் மகள் திருமணம் செய்து கொள்ள போகிறாள் என சொல்ல ராதிகாவும் வேற வழி இல்லாமல் ஆமாம் என சொல்கிறார். அதை கேட்டு மயூராவும் சந்தோசப்படுகிறார். இந்த விஷயத்தை கேள்விப்பட்டு கோபியும் சந்தோசப்பட இருக்கிறார். ராதிகா உண்மையாகவே மனம் மாறி விடுவாரா என்பது எல்லாம் இனி வரும் எபிசோடுகளில் வர இருக்கிறது.