பள்ளி & கல்லூரி மாணவர்களுக்கு குட் நியூஸ் – நாளை விடுமுறை அறிவிப்பு!!
கனமழை காரணமாக புதுச்சேரியில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு நாளை (ஜூலை 25) ஒரு நாள் மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
விடுமுறை அறிவிப்பு
கடந்த சில வாரங்களாக இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் கனத்த மழை பெய்து வருகிறது. அந்த வகையில் இந்த கனமழை காரணமாக தமிழகம் உள்ளிட்ட மற்ற மாநிலங்களில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், கர்நாடகாவின் குடகு மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போல கேரளா மாநிலத்தின் கண்ணூர் உட்பட 3 மாவட்டங்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
Join Our WhatsApp Group” for Latest Updates
வாட்ஸ்அப்பில் Unknown Call ஐ சைலன்ட் செய்துகொள்ளும் வசதி – வெளியான சூப்பர் அப்டேட்!
அந்த வகையில், புதுச்சேரியில் தற்போது பெய்து வரும் கனமழை காரணமாக நாளை (ஜூலை 25) பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, புதுச்சேரியின் மாஹே பிராந்தியத்தில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், தமிழகத்தின் 28 மாவட்டங்களுக்கு அடுத்த 3 மணிநேரத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.