மாநில அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் அமல் – அரசிதழில் வெளியீடு!

0
மாநில அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் அமல் - அரசிதழில் வெளியீடு!
மாநில அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் அமல் - அரசிதழில் வெளியீடு!
மாநில அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் அமல் – அரசிதழில் வெளியீடு!

பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என பல மாநில ஊழியர்கள் போராடி வருகின்றார். இந்நிலையில் ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு உறுதியான வருமானத்தை வழங்குவதற்காக பழைய ஓய்வூதியத் திட்டத்தை (OPS) அறிவித்து முதல் மாநிலமாக சத்தீஸ்கர் மாறியுள்ளது.

ஜாக்பாட் அறிவிப்பு:

2003ஆம் ஆண்டு வரை பழைய ஓய்வூதிய திட்டம் எல்லா அரசு ஊழியர்களுக்கும் நடைமுறையில் இருந்தது. பின்னர் 2004 ஜனவரி 1ஆம் தேதி முதல் தேசிய பென்சன் திட்டம் அமல்படுத்தப்பட்டது. தற்போது மத்திய அரசு ஊழியர்கள், பெரும்பாலான மாநில அரசு ஊழியர்களுக்கு தேசிய பென்சன் திட்டம் அமலில் உள்ளது. இந்நிலையில் நாடு முழுவதும் உள்ள அரசு ஊழியர்கள், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். தற்போது பழைய ஓய்வூதியத் திட்டம் பற்றிய சர்ச்சை மீண்டும் தொடங்கியுள்ளது. சில மாநில அரசுகள் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது பற்றி பரிசீலித்து வருகின்றன.

TN Job “FB  Group” Join Now

சத்தீஸ்கர் மாநில அரசு, கடந்த மார்ச் மாதம் ஹோலி பண்டிகையை முன்னிட்டு அரசு ஊழியர்களுக்கு ஒரு பெரிய பரிசை வழங்கியுள்ளது. பழைய ஓய்வூதியத் திட்டம் குறித்து அரசு பெரிய அறிவிப்பை வெளியிட்டது. அதாவது பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படும் என அரசு அறிவித்துள்ளது. சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேல், பட்ஜெட் தாக்கலின் போது, மாநில அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் செயல்படுத்துவதாக அறிவித்தார். இது தவிர, நீதி மற்றும் நிதிப் பாதுகாப்பை வழங்கும் வகையில், ராஜீவ் காந்தி கிராமின் கிரிஷி பூமிலெஸ் மஸ்தூர் நியாய் யோஜனா திட்டத்தின் கீழ் வரும் ஆண்டு முதல் ஆண்டு உதவித் தொகையை ரூ.6 ஆயிரத்தில் இருந்து ரூ.7 ஆக உயர்த்தியும் முதல்வர் அறிவிப்பை வெளியிட்டார்.

TCS, HCL, Infosys உள்ளிட்ட நிறுவன ஊழியர்கள் கவனத்திற்கு – முடிவுக்கு வரும் WFH!

இந்த அறிவிப்புபடி, ஏப்ரல் 1, 2022 முதல் பழைய ஓய்வூதிய திட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது. இதை தொடர்ந்து 2022-23ஆம் ஆண்டுக்கான ராஜஸ்தான் மாநில பட்ஜெட் உரையின்போது அம்மாநில முதல்வர் அசோக் கெலாட் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும் என்று தெரிவித்தார். இதன்படி, கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி முதல் பழைய ஓய்வூதிய திட்டம் ராஜஸ்தானில் அமல்படுத்தப்பட்டது. இருப்பினும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அரசு ஊழியர்களுக்கு அமல்படுத்திய முதல் மாநிலம் என்ற பெயரை சத்தீஸ்கர் தட்டி சென்று உள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!