தமிழகத்தின் இம்மாவட்டத்தில் நாளை (மே 25) உள்ளூர் விடுமுறை – ஆட்சியர் அறிவிப்பு!
தமிழகத்தில் கரூர் மாநகரில் அமைந்துள்ள மிகவும் சக்தி வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் கோவிலில் வைகாசி மாதம் திருவிழா கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற உள்ளது. அதனால் இந்த திருவிழாவில் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொள்ள நாளை இம்மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்று மாவட்ட ஆட்சியர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
உள்ளூர் விடுமுறை
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. இதில் குறிப்பாக அனைத்து வழிபாட்டு தலங்களிலும் திருவிழாக்கள் நடத்த அனுமதி மறுக்கப்பட்டது. இதனை தொடர்ந்து தற்போது கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து அனைத்து கட்டுப்பாடுகளும் திரும்ப பெறப்பட்டுள்ளது. இதையடுத்து தற்போது 2 வருடங்களுக்கு பிறகு அனைத்து மாவட்டத்திலும் உள்ள வழிபாட்டு தலங்களிலும் கோவில் திருவிழாக்கள் மிகவும் பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அத்துடன் இதில் பக்தர்கள் கலந்து கொள்ளவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
திருப்பதி தரிசனம் செல்ல திட்டமிடுவோர் கவனத்திற்கு – ஆகஸ்ட் மாத டிக்கெட் இன்று வெளியீடு!
அந்த வகையில் கரூர் மாநகரில் உள்ள புகழ்பெற்ற அம்மன் கோவில்களில் ஒன்றான அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் கோவிலில் வைகாசி மாதம் திருவிழா நடைபெற உள்ளது. இத்திருவிழா கடந்த 8ம் தேதி அன்று கம்பம் நடுதலுடன் தொடங்கப்பட்டது. அதன்படி இன்று முக்கிய நாள் என்பதால் பக்தர்கள் அனைவரும் மாவிளக்கு, அக்னி சட்டி, பால் குடம் எடுத்துக் கொண்டு ஜவஹர் பஜார் வழியாக சுமார் 1 கி.மீ தூரம் நடந்து அதன் பின் கோவிலுக்கு வந்து தங்களின் நேர்த்தி கடன்களை செலுத்துவார்கள். இந்த திருவிழாவின் மிகவும் முக்கிய நிகழ்வான கம்பம் ஆற்றுக்கு அனுப்புதல் நிகழ்வு நாளை நடைபெற உள்ளது.
Exams Daily Mobile App Download
இதனை காண திருச்சி, மதுரை, சேலம், சென்னை வெளி மாவட்டத்தினரும் அத்துடன் கர்நாடகா, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருகைபுரிவார்கள். அதனால் இதில் பக்தர்கள் அனைவரும் கலந்து கொள்ள ஏதுவாக இந்த மாவட்டத்தில் நாளை (மே 25) உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்று மாவட்ட ஆட்சியர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி நாளை அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் உள்ளிட்டவை செயல்படாது. இந்த விடுமுறை தினத்தை ஈடு செய்யும் விதமாக மாற்று வேலை நாள் விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.