தமிழகத்தில் மே 20ம் தேதி உள்ளூர் விடுமுறை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
நீலகிரி மாவட்டம் ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் மே 20ம் தேதி 124வது மலர் கண்காட்சி தொடங்க உள்ளது. இதனை முன்னிட்டு அன்றைய தினம் அம்மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
உள்ளூர் விடுமுறை:
நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி தமிழகத்தின் சிறந்த சுற்றுலா தலமாக உள்ளது. வருடம் தோறும் ஏராளமான பயணிகள் இங்கு வருகை புரிவர். அங்கு காலநிலை எப்போதும் மிதமான குளிராக உள்ளதால் கோடை காலத்தில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதும். இந்தியாவின் அனைத்து மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் பயணிகள் வருகை புரிவர். ஊட்டி சுற்றுலா பயணிகள் கண்டுகளிக்கும் அழகான மலை பகுதியாக உள்ளது. ஊட்டியில் மலர் கண்காட்சி, படகு போட்டி, படகு அலங்காரம், குன்னூரில் பழக்கண்காட்சி போன்றவை நடைபெறும்.
1 முதல் 9ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறப்பு!
இதில் மலர் கண்காட்சி பிரபலமானது. ஊட்டி மலர்கள் உற்பத்தியில் முதலிடமாக உள்ளதால் இங்கு மலர் கண்காட்சி நடைபெற்று வருகிறது. இந்த கண்காட்சியில் பல்வேறு வகையான வண்ண வண்ண மலர்கள் பார்வைக்காக வைக்கப்படுகிறது. வழக்கமாக மே மாதம் மலர் கண்காட்சி நடைபெறும் கடந்த 2 வருடமாக பரவிய கொரோனா பெருந்தொற்றல் விதிக்கப்பட்ட ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகள் காரணமாக மலர் கண்காட்சி ரத்து செய்யப்பட்டது. தற்போது கொரோனா பாதிப்புகள் குறைந்துள்ளதால் 2022ம் ஆண்டு மலர் கண்காட்சி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
அதன்படி ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் 124 வது மலர் கண்காட்சி மே 20ம் தேதி முதல் 24ம் தேதி வரை நடைபெற உள்ளது. முதல்வர் முக ஸ்டாலின் மலர் கண்காட்சியை தொடங்கி வைக்க உள்ளார். இதனை முன்னிட்டு மே 20ம் தேதி அம்மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களுக்கும் இந்த விடுமுறை பொருந்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. . ஆனால் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வுகள் வழக்கம் போல நடைபெறும். இந்த விடுமுறையை ஈடு செய்ய ஜூன் 4ம் தேதி பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.